Posts

Showing posts from September, 2022

பெண்கள் உடற்பயிற்சி கூடங்களை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை...

Image
 முதலில் உடற்பயிற்சி பற்றி ஒரு தெளிவு அவசியம். தகுதி பெற்ற பயிற்சியாளர் இருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும். நாகரீக மாற்றம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக இன்று நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உடற்பயிற்சி கூடங்களில் மல்டி பெஞ்ச், டிரெட் மில் ரன்னிங் மெஷின், பெஞ்ச் பிரஸ் என பலவிதமான நவீன உபகரணங்கள் உள்ளன.  இதுமட்டுமில்லாமல் மல்டி ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ்களும் உள்ளன. இதில் 4 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ், 6 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ், 12 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ் எனப் பல வகையான உடற்பயிற்சி கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.  உடல் எடையைக் குறைக்கவும், அதிகரிக்கவும் தனித்தனியே வசதி இருக்கிறது. இவ்வாறு, அனைத்து வசதிகளுடன் இந்த நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த பயிற்சி கூடங்களை நாடி செல்கின்றனர். முக்கியமாக பளு தூக்குதல், தடகளம், கால்பந்து, நீச்சல், வாலிபால், பேஸ்கட்பால், கிரிக்கெட் உட்பட பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அதிகம் செல்கின்றனர்.  அப்படி செல்கிறவர்கள் சிலவற்றைக் கவனிக்க வ

சத்தான ஸ்நாக்ஸ் ராகி பக்கோடா ....

Image
 இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம். கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். தேவையான பொருட்கள்:   கேழ்வரகு மாவு - 1 கப்  வெங்காயம் - 1  பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி  ப. மிளகாய் - 3  பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை  கறிவேப்பிலை - ஒரு கொத்து  உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு  செய்முறை :  * ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.  * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  * பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.  * அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.  * இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும். ALSO READ :  கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் .....

காலின் அழகைக் கெடுக்கும் குதிகால் வெடிப்பு .......

Image
 குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான். நம் பாதங்களில் இருக்கும் பகுதிகளில் குதிகால் பகுதி தான் அதிக அழுத்தத்தை தாங்குகிறது. இதனால் தான் அதிகமாக நடப்பது, நின்று கொண்டே இருப்பது போன்ற விஷயங்களால் நிறைய பேர் பாத வெடிப்பை சந்திக்கின்றனர். இந்த குதிகால் வெடிப்பு எந்த காரணத்தினால் உண்டாகிறது. மேலும் அதற்கு எப்படியெல்லாம் சிகிச்சை செய்யலாம் என அறிந்து கொள்வோம்.  இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். இயற்கையாகவே பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் போது குதிகால் வெடிப்பு மறைகிறது. பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான். குதிகால் வெடிப்பு காலின் அழகைக் கெடுப்பதோடு பல சமயங்களில் நமக்கு வலியையும் ஏற்படுத்துகிறது.  இது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. குதிகாலில் உள்ள சருமம் வறண்டு போகும் போது அதில் வெடிப்புகள் உருவாகின்றன. அதே மாதிரி நாம் நடக்கும் போது குதிகால் பகுதி அதிக அழுத்தத்தை சந

கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் .....

Image
 ஆலு புஜியாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். குழந்தைகளுக்கு பிடித்தான அருமையான ஸ்நாக்ஸ் இது. தேவையான பொருட்கள்   உருளைக்கிழங்கு - அரை கிலோ  புதினா - ஒரு கைப்பிடி  ப.மிளகாய் - 1  கடலை மாவு - 1 கப்  மிளகாய்தூள் - சுவைக்கேற்ப,  சாட் மசாலா - சுவைக்கேற்ப,  சீரக தூள் - சுவைக்கேற்ப  பெருங்காயம் - ஒரு சிட்டிகை  உப்பு - சுவைக்கேற்ப  செய்முறை:  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து வைத்து கொள்ளவும்  • மிக்சியில் புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசிய அரைத்து கொள்ளவும்  • ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரைத்த புதினா விழுது, மற்றும் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய்தூள், சாட் மசாலா, சீரக தூள் மற்றும் சிறிது பெருங்காயம் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் .  • கலந்த உருளைக்கிழங்கு கலவையை சேவை அச்சில் போட்டு வைக்கவும்.  • கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சேவை அச்சில் உள்ள கலவையை பிழிந்து மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.  • பொரித்த சேவையை ஒரு தட்டில் போட்டு சிறிது சிறிதாக உடைத்து, சிற

தினை - தேங்காய்ப்பால் புலாவ் .......

Image
 சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். தேவையான பொருட்கள் :   தினை அரிசி - ஒரு கப்  தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தண்ணீர் - ஒரு கப்  பச்சைப் பட்டாணி - அரை கப்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)  எண்ணெய் - 4 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  தாளிக்க:   பட்டை - 2  சோம்பு - கால் டீஸ்பூன்  பிரியாணி இலை - ஒன்று  ஏலக்காய் - ஒன்று  செய்முறை:  தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.  அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.  பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். இப்போது சூப்பரான தினை - த

வாரம் ஒருமுறை சருமத்திற்கு ஸ்கரப் செய்தால் கிடைக்கும் பலன்கள்...

Image
 முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.  முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்யணும்... என்ன செய்யக்கூடாது என்று தெரியுங்களா? இன்றைய காலத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை இல்லாமல் சுத்தமாக இருக்கும் முகத்தை காண்பது என்பது அரிதானது. அவற்றை நீக்குவதற்கு என்னதான் அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தாலும், சருமத்தில் இருந்து அவை முழுவதும் நீங்கிவிடுவதில்லை. மேலும் எவ்வளவு தான் விலை உயர்ந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தினாலும், இதற்கான ஒரு நல்ல முடிவு கிடைக்க பல நாட்கள் ஆகின்றன.  எனவே அழகான முகத்தை இரண்டே நாட்களில் பெறுவதற்கு சில அழகான டிப்ஸ் இருக்கிறது. முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் வெளியே செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிட வேண்டும்.  இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும். அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பருக்கள் வந்துவிடும். ஆகவே குளிக்கும் போது

வாட்ஸ்அப் வீடியோ காலில் புதிய வசதி..! இனி இங்கேயும் மீட்டிங் நடத்தலாம்...

Image
 இந்த வாரம் முதல் அழைப்பு இணைப்புகள் கிடைக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் கணக்கிற்கான அம்சத்தைப் பெறுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். கொரோனா காலம் தொடங்கியதில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் என்பது அதிகம் புழக்கத்தில் வந்துவிட்டது.பள்ளி வகுப்பு முதல் வெளிநாடுகளுடனான அரசுமுறை ஒப்பந்தங்கள் வரை எல்லாமே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தான் நிகழ்ந்தது. இந்த நேரத்தில் ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் அதிகம் வளர்ச்சி பெற்றது. அதில் ஒரு மீட்டிங்கான லிங்க் உருவாக்கி பல தளங்கள் மூலம் பல்வேறு நபர்களுக்கு பகிரும் வசதி இருக்கிறது. அந்த ஒற்றை லிங்க் வைத்து யாரும் மீட்டிங்கில் இணையும் வாய்ப்பை வழங்குகிறது. வாட்சப் செயலியில் வீடியோ கால் வசதி இருந்தாலும் நம்மிடம் எண் உள்ளவர்களுடன் மட்டும் தான் பேச முடியும். மற்றவர்களை அது அனுமதிக்காது. இது குறுகிய ஒரு வட்டத்தினரிடம் மட்டும் பேசும் வாய்ப்பை அளிக்கும். அதை மாற்றி மற்ற வீடியோ கான்ஃபரன்ஸ் செயலிகளை போல் லிங்க் கொண்டு நுழையும் வசதியை வாட்ஸ் அப் தொடங்க உள்ளது. இந்த வாரம் முதல் அழைப்பு இணைப்புகள் கிடைக்கும் என்று WhatsApp கூறுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் தங்க

YouTube shorts எடுப்பதில் கில்லாடிகளாக நீங்கள்?.. பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை இனி நீங்களும் பெற முடியுமாம்!

Image
 இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டபிறகு இன்ஸ்டா ரீல்ஸில் மக்களின் மோகம். இன்றைக்கு மக்களிடம் பிரபலமாகி வரும் YouTube shorts மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை படைப்பாளிகளுக்கு YouTube வழங்கியுள்ளது. இதில் இசையைப் பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் வருவாய் பங்கு எவ்விதத்திலும் மாறாமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. YouTube மக்களிடம் பிரபலமாகியுள்ள வார்த்தைகளில் ஒன்றாக மட்டுமில்லாது மக்களை தன் வசமாக்கியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இன்றைய நிகழ்வுகள், செய்திகள், பாடல்கள், கதைகள், சமையல் குறிப்புகள், குழந்தைகள் செல்லும் சுட்டித்தனங்கள் என பல விதமான வீடியோக்களை YouTube ல் பகிர்ந்து வருகின்றனர். இதில் வீடியோக்கள் அப்லோட் செய்தால் நிச்சயம் வருமானம் ஈட்டலாம் என்ற அனைவருக்கும் தோன்றியது. இதனால் தான் தற்போது YouTube சேனல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. விளையாட்டுத்தனமாக எடுக்கும் வீடியோக்கள் அனைத்தும் பிரபலமானதையடுத்து ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக்கொண்டு புதிய யூடியூப் சேனல்களை ஆரம்பித்துவருகின்றனர். பொதுவாக குழந்தைகள், இளம் தலைமுறையினர், பெண்கள், முதிய

இந்தியாவில் ஆவிகள் நடமாட்டம் நிறைந்த ஐந்து சாலைகள்! சென்னையிலும் இருக்காம்...

Image
 Ghost Street | பற்பல கதைகளுடனும் நம்பவே முடியாத அமானுஷ்ய சம்பவங்களும் நிறைந்த சாலைகளில் பயணம் செய்து அந்த அனுபவத்தை பெறுவது வேறொரு வகையான த்ரில். காரை எடுத்துக்கொண்டு, ஜன்னல் கண்ணாடிகளை முழுவதும் இறக்கிவிட்டு நீண்ட தூர மலை பயணங்கள் செய்வது ஒரு அலாதியான இன்பத்தை கொடுக்கும் அதுவும் பலவித வளைவுகளுடனும் மிக அற்புதமான இயற்கை காட்சிகளையும் கண்டு களித்துக் கொண்டு பயணம் செய்வது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வேறு விதமான அனுபவத்தை பெறுவதற்காக பயணம் செய்பவர்களும் உண்டு. பார்ப்பதற்கே பயம் தரக்கூடியதும் அமானுஷ்யங்கள் நிறைந்ததுமான பல்வேறு சாலைகள் நம் நாடு முழுவதும் இருக்கின்றன. பற்பல கதைகளுடனும் நம்பவே முடியாத அமானுஷ்ய சம்பவங்களும் நிறைந்த சாலைகளில் பயணம் செய்து அந்த அனுபவத்தை பெறுவது வேறொரு வகையான த்ரில். இப்படிப்பட்ட அமானுஷ்ய விஷயங்களை தேடி தேடி சாகச பயணம் செய்பவரா நீங்கள். அப்படி எனில் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டிய ஐந்து முக்கியமான சாலைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம். ப்ளூ கிராஸ் சாலை, சென்னை:  சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள இந்த சாலை கண்ட

சாப்பிடுவதில் இப்படியும் ஒரு உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்..!

Image
  சாப்பிடுவதில் இப்படியும் ஒரு உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்..! சிமானிலே 60 வினாடிகளில் 4.26 அவுன்ஸ்- அதாவது 121 கிராம் கோழி பாத கறியை உட்கொண்டு வெற்றி பெற்றார். இது அவரது போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். உணவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பிடித்த உணவை எடுத்து வைத்து  ஆரம்பித்தால் பாத்திரத்தின் அடித்தட்டி விட்டாலும் பசி தீராது. உணவுகளை வைத்து சாதனை என்று எடுத்துக்கொண்டால் ரகம் ரகமாக வந்து ஆச்சரியப்பட வைக்கும். அப்படி ஒரு ஆச்சர்யம் தான் இப்போது நடந்துள்ளது.  கோழியில் எல்லோருக்கும் பிடித்தது என்றால் லெக் பீஸ் தான். பிரியாணி வாங்கினால் கூட லெக்பீஸ் கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.  குழம்பிலும் அப்படியே, ஆனால், கோழிகள் பாத விரல்களை நீங்கள் விரும்பி சாப்பிடுவதுண்டா?கோழி பாதம் என்பது ஒரு தனித்துவமான நாட்டுப்புற உணவாகும், இது உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உண்ணப்படுகிறது. கோழிக்கால் உண்பவர்களின் முழுமையான எண்ணிக்கை சாதாரண இறைச்சி உண்பவர்களை விட குறைவு என்றாலும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விருப்பமான உணவாக உள்ளது. இப்போது, ​​தென்னாப்பிரி

பொம்மை வீடு கட்டி கொடுத்த தந்தை..குதுகலமாக விளையாடும் குழந்தையின் க்யூட் வீடியோ வைரல்....

Image
 தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு லிஃப்ட் வைத்து பொம்மை வீடு ஒன்று கட்டிக்கொடுத்துள்ள அழகான வீடியோ ட்விட்டரில் தற்போது ட்ரென்டாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. குழந்தைகளின் உலகமானது குழந்தைகளை மட்டுமல்லாது அவர்களை காண்போரையும் குதுகலத்தில் ஆழ்த்துபவை. குறிப்பாக, பெற்றோருடன் குழந்தைகள் கொஞ்சி விளையாடி மகிழும் காட்சிகள் அவரின் முகத்திலும் மகிழ்ச்சியை தாமாக கொண்டுவந்து சேர்க்கும். இது போன்ற குழந்தைகளின் க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அப்படிதான் தந்தை மற்றும் குழந்தையிடையேயான அழகான வீடியோ தற்போது ட்ரென்டாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த வீடியோவை டேனி டெரானே என்ற ட்விட்டர் யூசர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காணொலியில், தந்தை ஒருவர் தனது குட்டி 2-3 வயது மதிக்கத்தக்க குட்டி குழந்தைக்கு மரத்தினால் ஆன விளையாட்டு வீடு ஒன்றை கட்டி தந்துள்ளார். இந்த வீட்டின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் குழந்தையின் குட்டி வீட்டுக்கு மரத்தினால் ஆன பொம்மை லிஃப்ட் ஒன்றையும் வைத்துள்ளார். வீடியோவில் வரும் அந்த குட்டி குழந்தை மெல்ல தள்ளாடி நடந்து சென்று மர லிப்டில் ந

நாம் தினந்தோறும் அருந்த வேண்டிய மூன்று வகையான ஜூஸ் வகைகள் : என்னென்ன பலன் கிடைக்கும்.?

Image
 Health Benefits of Juice | நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். கீரை சமைக்க நேரமில்லை என்பவர்கள், பழங்களாக சாப்பிட பிடிக்கவில்லை என்பவர்கள் தினசரி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால், நம் கட்டுப்பாட்டை மீறி அல்லது தவிர்க்க முடியாத சூழலில் துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறோம். இதனால் உடல் பருமன் அதிகரித்து, நமக்கு தேவையற்ற தொந்தரவுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, துரித உணவு சாப்பிடுவதாலும், மோசமான வாழ்வியல் பழக்கங்களாலும் மலச்சிக்கல் பிரச்சினையால் பலரும் அவதி அடைகின்றனர். இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்றால் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும். இத்துடன், நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். கீரை சமைக்க நேரமில்லை என்பவர்கள், பழங்களாக சாப்பிட பிடிக்கவில்லை என்பவர்கள்

பற்களில் உண்டாகும் கறைகளை ஒரே நாளில் போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்...

Image
 பற்களில் மஞ்சள் கறை மற்றும் சொத்தை போன்றவைகள் உண்டாகும். இவை நீண்ட காலமாக பலருக்கும் இருக்கும். அதை எப்படி சரி செய்வது என தெரியாமல் மருத்துவர்களை நாடுவார்கள். ஆனால், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரிசெய்யலாம். இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும். அடுத்து, ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும். பின்னர், பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்கும். எனவே பேஸ்டுடன் இரண்டு சொட்

மட்டன் குழம்பிற்கு மாற்றாக அருமையான மட்டன் தால்சா!

Image
  மட்டன் குழம்பிற்கு மாற்றாக மட்டன் தால்சா ரெசிபியை செய்யலாம்.  தேவையான பொருட்கள் மட்டன் எலும்பு - 200 கிராம் துவரம்பருப்பு - 50 கிராம் கடலை பருப்பு - 50 கிராம் கத்தரிக்காய் - 2 வாழைக்காய் - 1/2 காய் புளி - 10 கிராம்  மாங்காய் - 1/2 இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்  பச்சை மிளகாய் - 4  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 5 கிராம் பிரிஞ்சி இலை - 2 உப்பு - தேவைக்கு. செய்முறை துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும்.  வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.  ஒரு குக்கரில் இரண்டு பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.  தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.  கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறவும். ALSO READ :  முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் தூ

முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் தூண்டும் வல்லாரைக் கீரை துவையல்....

Image
 வல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது.வல்லாரைக் கீரையைக் கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம். முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் வல்லாரை துவையலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் எண்ணெய் - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது) பூண்டு - 5 பற்கள் வரமிளகாய் - 2 வல்லாரைக் கீரை - 2 கப் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் - 1 டீஸ்பூன் புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப செய்முறை முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வல்லாரைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, வெல்லம், ப

தலைமுடியை பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஐந்து புரத உணவுகள்...

Image
 ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் தலைமுடி பிரச்சினையும் ஒன்று. சுற்றுச்சூழல் மாசுபாடு, துரிதமான வாழ்வியல் சூழல், தலைக்கு நாம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் இரசாயனப் பொருட்கள் போன்றவற்றால் தலைமுடி அதிகம் உதிர்கிறது. இதற்கு நம் உணவில் புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்ய முடியும். அந்த வகையில் எவ்வாறான உணவுகளிலிருந்து ஊட்டச்சத்துக்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பாக தெரிந்துக் கொள்வோம். உணவு பயன்பாட்டின் மூலம் தலைமுடியை பாதுகாக்க சில டிப்ஸ் மீன் வகைகளில் அதிகபடியான புரதம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் காணப்படுகிறது. இது தலைமயிர் கால்களை வலுவடைய செய்து முடி உதிர்வை தடுக்கும். பால், தயிர் மற்றும் முட்டை ஆகியவை புரதசத்து அதிகமுள்ள உணவுகளாகும். தினசரி இவற்றை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம் மற்றும் இரும்புச் சத்து, பி12, ஃபேட்டி ஆசிட் காணப்படுகிறது இது முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. சிறு தானியங்களில் புரதம், ஜிங்க், இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. இதனால் தலை முடி வளர

10 நிமிடங்களில் சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி?

Image
 நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும். இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது மற்றும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும்.   உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்யும். கோடை கால நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடலானது குளிர்ச்சி தன்மையாக மாறும்.   இப்படி பல நன்மைகளை கொண்ட வாழைப்பழத்தை கொண்டு கேக் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் All-Purpose Flour - ஒரு கப் சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் - இரண்டு டீஸ்பூன் உப்பு - 1/4 டீஸ்பூன் நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன் தயாரிப்பு முறை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக க

பரு வந்த தழும்பை மறைய வைக்கனுமா? இதோ சில எளிய வழிகள் உங்களுக்காக...

Image
 பொதுவாக முகப்பருக்கள் வந்து போவதைவிட முகப்பருவால் ஏற்பட்ட தடங்களும் தழும்புகளும் மறையாமமல் இருப்பது கொடுமையானது. இதற்கு மிக முக்கியக் காரணமே நம்முடைய சமச்சீரற்ற உணவு முறை, மாசுக்கள், சருமத்தி்ற்கு பயன்படுத்தும் பொருள்கள் வை தான். அது நம்முடைய முக அழகையே கெடுத்துவிடுகின்றது. இதனை எளிய முறையில் கூட போக்கலாம். அந்தவகையில் முகப்பருக்களால் ஏற்படும் தடங்கள் மற்றும் தழும்புகளை நீக்க என்ன செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.  ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்து பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை தவறாமல் செய்து வந்தால் சில நாட்களிலேயே பருக்கள் வந்த இடத்திலுள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். கடலை மாவுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு திக்கான பேஸ்ட்டாகக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்த

சளி பிரச்சினையை விரட்டியடிக்கும் மிளகு கசாயம் செய்வது எப்படி?

Image
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி பிரச்சினை காணப்படும் இது காலபோக்கில் சலதோஷம், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற நோய் நிலைமைகளை உருவாக்கும். இதனை மருந்துகளை கொண்டு சரி செய்வதை விட வீட்டு வைத்தியமுறையில் சரி செய்வது இலகுவாக இருக்கும். அந்த வகையில் சளி பிரச்சினைகளை சரிச் செய்யகூடிய பானமொன்று தயாரிப்பது குறித்து தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள் கருப்பு மிளகு - 1/4 கப் துளசி : 10 எண்ணிக்கை பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 2 கப் தயாரிப்பு முறை ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்து மிக்ஸியில் பொட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்துங்கள். பிறகு ஒரு வடிகட்டியைக் கொண்டு கஷாயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சீரணமின்மை, இருமல் மற்றும் சலதோஷம் அறிகுறிகள் குறையும். குறிப்பு - இதனை வாரத்திற்கு 3 அல்லது 4 தடவைகள் குடித்து வந்தால் ச

நீண்ட நேரம் இயர் போன்களைப் பயன்படுத்துபவர்கள் இந்த பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் : எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Image
 நீண்ட நேரத்திற்கு இயர்போன்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் மற்றொரு முக்கியமான பக்க விளைவு மயக்கம். பொதுவாக அதிக சத்தத்துடன் நீங்கள் பாடல்கள் கேட்கும் போது காதுகளுக்கு அழுத்தம் அதிகமாகும். இதனால் சில சமயங்களில் உங்களுக்கு மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் காதில் மற்றும் கழுத்தில் இயர்போன்களோடு தான் சுற்றித்திரிகின்றனர். பிடித்த பாடல்களைக் கேட்பது, கார் அல்லது டூவிலரில் சென்றாலும் இயர்போன்களின் உதவியுடன் எவ்வித இடையூறும் இல்லாமல் பேசுவது என பலவற்றிற்கு உங்களுடன் பயணிக்கும் நண்பர்களாகவே மாறிவிட்டது. ஆனால் நாம் இயர்போன்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இல்லாவிடில் வாழ்நாள் முழுவதும் எதையும் கேட்க முடியாத அளவிற்கு காதில் பெரிய பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தி விடும். ஆம் ஒரு நாள் முழுவதும் அல்லது நீண்ட நேரத்திற்கு அதிக சத்தத்துடன் இயர்போன்களை நீங்கள் பயன்படுத்தும் போது காது செவுல்களில் அதிக அதிர்வுகள் ஏற்படும். ஆரம்பத்தில் வலியை ஏற்படுத்தினாலும் நாளாக நாளாக காது கேளாமை, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றன

Smartphone-ஐ இரவில் சுவிட்ச் ஆப் செய்து வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆச்சரிய தகவல்...

Image
 பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போனை அவ்வபோதோ அல்லது இரவு நேரத்திலோ சுவிட்ச் ஆப் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? செல்போனை இரவிலோ அல்லது ஒருமுறையாவது சுவிட்ச் ஆப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள். கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட்போன்களை நாம் இயக்காமல் வைத்திருந்தால் கூட அதில் இருந்து கதிர்வீச்சுகள் வெளியாகிறது. கதிர்வீச்சின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. வல்லுநர்கள் கதிர்வீச்சு அளவை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். இதை செய்வது மிக எளிது, அதாவது இரவு நேரத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டால் போதும். இப்படி செய்வது கதிர்வீச்சு வெளியாவது கட்டுப்படும். சார்ஜிங் சார்ஜ் செய்யும் போது குறைந்தபட்சம் உங்கள் தொலைபேசியை அணைக்கலாம். சார்ஜ் ஆகும் நேரத்தில் எப்படியும் அழைப்புகளைச் எடுக்கவோ அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பவோ நாம் போனை பயன்படுத்த மாட்டோம். இரண்டாவதாக, உங்கள் மொபைலை அணைப்பது உங்கள் தொலைபேசியின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய உதவுகிறது. நிபுணர்கள் கருத்த

செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இந்த தவறை தான் தினம் செய்றீங்க....

Image
 கையில் செல்போன் வைத்திராத மனிதர்களையே பார்ப்பது அரிது என்றாகிவிட்டது. ஆனால் உண்மையில் செல்போனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் பலர் இன்னும் உள்ளனர். செல்போனை பயன்படுத்துவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டும் எடுத்து பேசுவது பெண்களுக்கு நல்லது. ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும். எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். போன் பேசிக்கொண்டிருக்கும் போது காது அருகே சூடாகிக் கொண்டே இருந்தால் அந்த போனை தூர எறிவது நல்லது. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது போன் வந்தால் அப்படியே பேசக் கூடாது. போன் வரும் போது தான் ரேடியேசன் இருக்கும். போன் ரிங்கிங் ஆவதை விட வைப்ரேசன் தான் அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும்.  ALSO READ :  உடல் எடையை வேகமாக குறைக்க டயட்டில் இந்த 4 விஷயங்களை மாத்துங்க..!

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?

Image
 வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா? வேண்டாமா என்ற சந்தேகம் பலரிடையே காணப்படும். அப்படி வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும் போது உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள். தற்போது வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா? என்பதை குறித்து இங்கே பார்ப்போம்.  வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?   கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழகிய, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வெறும் வயிற்றில் செய்யும் உடற்பயிற்சி உகந்தது.  மற்றவர்கள் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையக்கூடும். இதனால் தலைச்சுற்றல், குமட்டல் ஏற்படலாம்.   உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்? உடற்பயிற்சி செய்வதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாழைப் பழம் அல்லது சில துண்டு ஆப்பிள்கள் சாப்பிடலாம். இவை உடலுக்கு ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியை சிறிதளவு சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை சளியை உருவாக்கக

வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் போதும் : இறப்பு அபாயம் கணிசமாகக் குறையும்...

Image
 மிதமான அளவில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் உடல் செயல்பாடுகள் கூட, பல காரணங்களால் ஏற்படும் மரண ஆபத்துகளை வெகுவாக குறைக்கிறது. தற்போதைய மெஷின் வாழ்க்கையில் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகள் காரணமாக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளும் பலரும், பாதிக்கப்பட்ட ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறிது அலட்சியமாகவே செயல்படுகின்றனர். இதை மிக எளிதாக கண்டறிய வாரத்திற்கு நாம் அனைவரும் உடற்பயிற்சிக்கென்று எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்பதை கணக்கிட்டாலே போதும். இந்நிலையில் மிகப்பெரிய விரிவான ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு சராசரியாக 150 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கம் இறப்பு அபாயத்தை பெரிய அளவில் குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முடிவு சுமார் 30 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் சுமார் 1,16,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஆய்வின் முடிவுக்கு வலு சேர்க்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உடல் செயல்பாடு பற்றிய விரிவான சுய அறிக்கைகளுடன் ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்க கேட்கப்பட்டது. அமெரிக்கன் ஹார்ட்