தினை - தேங்காய்ப்பால் புலாவ் .......

 சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.


தேவையான பொருட்கள் :

 தினை அரிசி - ஒரு கப்

 தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)

 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) 

தண்ணீர் - ஒரு கப்

 பச்சைப் பட்டாணி - அரை கப் 

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) 

எண்ணெய் - 4 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 தாளிக்க:

 பட்டை - 2

 சோம்பு - கால் டீஸ்பூன் 

பிரியாணி இலை - ஒன்று 

ஏலக்காய் - ஒன்று

 செய்முறை: 

தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

 அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

 இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.

 பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். இப்போது சூப்பரான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.


ALSO READ : 

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....