Posts

Showing posts from October, 2022

உடலுக்கு ஆரோக்கியமா இனிப்பு? சர்க்கரை Vs வெல்லம்: இரண்டில் எது சிறந்தது?

Image
 சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வெறுமனே இனிப்புகளில் பயன்படுத்துவது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது - நிபுணர் கருத்து காலை காபி & டீ-யில் துவங்கி இரவு தூங்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையை நாம் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். அதிலும் வெள்ளை வெளேரென்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தான் பலரது விருப்பமாக இருந்து வருகிறது. எனினும் தினசரி நாம் எடுத்து கொள்ளும் அதிக சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை ஹை பிளட் பிரஷர், எடை அதிகரிப்பு, நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயங்களை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவது பல்வேறு உடல்நல கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை பயன்படுத்த பலரும் பரிந்துரைக்கிறார்கள். வெள்ளை சர்க்கரை என்பது பீட் அல்லது கரும்பு சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாகும். அதே நேரம் வெல்லம் சுத்திகரிக்கப்படாத கரும்பு சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக சர்க்கரை கடுமையான செயல்ம

முகம் பளபளக்கும்.. முடி கருகருக்கும்.. கற்றாழையில் இருக்கு சூப்பரான பலன்கள்!

Image
 Aloe vera health Benefits: கற்றாழை ஜெல்களை வாரத்திற்கு ஒரு முறையாவது முடியில் அப்ளை செய்து வந்தால், முடியை வலுப்படுத்தி ஆலோ வேரா என்றழைக்கப்படும் கற்றாழை இன்றைக்கு மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள ஒரு அற்புத மூலிகையாகும்.  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளிலும் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளைச் சரி செய்வதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது கற்றாழை. குறிப்பாக ஒரு மனிதனுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோ அமிலங்கள் உள்ளதோடு வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம், தாமிரம் செலினியம், குரோமியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தான் எந்தவித மருந்துகள் மற்றும் சருமத்தைப் பாதுகாப்பதற்கான பேஸ்வாஷ் மற்றும் லேசன்கள் தயாரித்தாலும் கற்றாழை நிச்சயம் இடம் பெற்றிருக்கும். மருத்துவக்குணங்கள் நிறைந்த கற்றாழையை முடி உதிர்வதைத் தடுப்பது முதல் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் எவ்வித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே கற்றாழை எந்தளவிற்கு மக்களின் சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு உதவுகிறது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்

புரோட்டீன் சத்துக்களை அள்ளித்தரும் பருப்பு உருண்டை குழம்பு! செய்வது எப்படி?

Image
 மதிய உணவுக்கு எப்போதுமே சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு போராடித்து விட்டதா? இதோ உங்களுக்கான அட்டகாசமான சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் உருண்டைக்கு கடலைப்பருப்பு– 1/4 கப் துவரம் பருப்பு – 3/4 கப் காய்ந்த மிளகாய் – 4 சோம்பு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது) கருவேப்பிலை – சிறிதளவு குழம்பு செய்வதற்கு நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி சின்ன வெங்காயம்- 10 முதல் 15 பூண்டு- 8 முதல் 10 பல் தக்காளி- 2 புளி- தேவையான அளவு  மஞ்சள் தூள்- சிறிதளவு குழம்பு தூள்- 1 முதல் 2 தேக்கரண்டி வெந்தயம் – அரை தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி கருவேப்பிலை – சிறிதளவு செய்முறை முதலில் கடலை பருப்பு, துவரம் பருப்பை சுமார் 1 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும், இதனை மிக்ஸி ஜாரில் போட்டு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டு சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இதனை அப்படியே பொரித்து எடுத்தும் பயன்படுத்தலாம் அல

90'S கிட்ஸ்களின் பேவரைட் பொரி உருண்டை! வீட்டிலேயே செய்யலாம்....

Image
 90's கிட்ஸ்களின் பேவரைட்டில் நிச்சயமாக பொரி உருண்டைக்கு இடமுண்டு, கிராமத்து பெட்டி கடைகளை அலங்கரிக்கும் பொரி உருண்டையை ருசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி ரசித்து ருசித்து சாப்பிட்ட பொரி உருண்டையை மிக எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் பொரி- 4 கப் வெல்லம்- 1 கப் நெய்- 2 டீஸ்பூன் உப்பு- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்- சிறிதளவு செய்முறை ஒரு கப் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும், இதனை வடிகட்டிக் கொண்டு 2 டீஸ்பூன் நெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பாகு காய்ச்சவும். கெட்டியாக வந்தவுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து பொரியை கொட்டி கலந்து விடவும், கையில் அரிசி மாவு தேய்த்துக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவ்வளவு தான், பொரி உருண்டை தயார்!!! ALSO READ :  உடலைக் குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம் ....

உடலைக் குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம் ....

Image
 உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தென்னம்பூவைக்கொண்டு லேகியம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் போன்றவை உடலுக்கு நலம் சேர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தென்னையின் பூவும் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளைத் தரக்கூடியது. இது துவர்ப்புத் தன்மை கொண்டது. உடல் வெப்பத்தைப் போக்கி குளுமையாக்கும். சிறுநீரைப் பெருக்கும். ரத்த பேதி, சீதபேதி, நீர்ச்சுருக்கு, வயிற்று கடுப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும்.  தென்னம்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், அதிக ரத்தப்போக்கு மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் தீரும். பிரசவித்த பெண்களின் உடல் சோர்வை நீக்கி வலுவாக்கும். உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தென்னம்பூவைக்கொண்டு லேகியம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:  தென்னம்பூ (பெரியது) - 1  நாட்டு சர்க்கரை - 2 கிலோ  ஓமம் - 50 கிராம்  சதுப்பா - சிறிதளவு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)  சீரகம் - 50 கிராம் வெள்ளை கடுகு - 50 கிராம்  கறுப்பு கடுகு - 50 கிராம்  சிவப்பு அரிசி - 50 கிராம்  வ

மன ஆரோக்கியத்துக்கு உதவும் 'அரோமா தெரபி'

Image
 வாசனையை நுகரும்போது தன்னிச்சையாக புன்னகைப்பது, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை சொல்லலாம். நல்ல வாசனையை நுகரும்போது இயல்பாகவே மனதில் மகிழ்ச்சியும், அமைதி நிலையும் உண்டாகும். மூக்கில் உள்ள 'சிலியா' என்ற மெல்லிய முடிகள்தான், இந்த வாசனையை நுகர்ந்து மூளையில் உள்ள 'லிம்பிக்' சிஸ்டத்துக்கு கொண்டு செல்லும்.  அந்த வாசனையின் தன்மைக்கு ஏற்றபடி மனதும், உடலும் செயல்படும். உதாரணமாக பூக்களின் வாசனையை நுகரும்போது தன்னிச்சையாக புன்னகைப்பது, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை சொல்லலாம். அந்த வகையில், இயற்கை நறுமண எண்ணெய்கள் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறைக்கு 'அரோமா தெரபி' என்று பெயர்.  பெரும்பாலும் இதில் லாவெண்டர், டீ ட்ரீ, லெமன், பெப்பர்மிண்ட் ஆகிய எண்ணெய்கள் பயன்படுகிறது. மல்லிகை, ரோஜா, லவங்கப் பட்டை, சந்தனம், ஆரஞ்சு, இஞ்சி, பாதாம் போன்றவற்றிலிருந்தும் அரோமா எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.  இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெய்யை நான்கு சொட்டுக

கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!

Image
 இன்றைய காலக்கட்டத்தில், நம்மில் பெரும்பாலானோர், நமக்குள் எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆன விடையை கூகுளில் தேடுகிறோம்.   கூகுள் தேடலில் நீங்கள் செய்த ஒரு தவறு உங்களைச் சிறையில் தள்ளும். ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைத் தேடும்போது, உங்கள் IP முகவரி நேரடியாகப் பாதுகாப்பு நிறுவனங்களைச் சென்றடையும். ஹேக்கிங் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சித்தால் அரசாங்கத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.   இன்றைய காலக்கட்டத்தில், நம்மில் பெரும்பாலானோர், நமக்குள் எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆன விடையை கூகுளில் தேடுகிறோம்.  அன்றாட செய்திகள், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் என அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாக இருக்கும் கூகுள், நமக்கு தகவல்களை அள்ளித் தரும் தளமாக இருக்கிறது. கூகுள் நிறுவனத்திடம் எந்த கேள்வி கேட்டாலும், அது உடனடியாக பதிலளிக்கும். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காவும், குற்றங்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும், தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூகுளில் நீங்கள் நினைப்பதை எல்லாம தேட முடியாது.  எல்லா கேள்வியையும் உங்களால் கேட்க முடி

ஆரோக்கியத்திற்கு அருமருந்து துளசி! துளசியின் அபூர்வ மருத்துவ குணங்கள்.....

Image
  Medicinal properties Of Basil: துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது துளசி செடியில் உள்ள மருத்துவ குணங்கள் துளசி நீரை நாள்தோறும் பருகி வந்தால் கிடைக்கும் பலன் சளி, இருமல் போன்ற நோய்களுக்கு சிறந்தது துளசி   துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது. துளசியில் விஷ்ணு பத்தினி மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை. துளசியை வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல, செல்வ வளமும் சேரும். துளசி நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அருமருந்தாக திகழ்கிறது. துளசியை உண்பதால் செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுகிறது. தலைவலியை போக்கும் துளசியின் பயன்பாடு ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுக்கும். துாக்கமில்லாமல் சிரம்பபடுபவர்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது துளசி. துளசி

Skin Care Tips: முகம் அதிக பொலிவு பெற பெரிய ஏலக்காய்... எப்படி பயன்படுத்துவது....

Image
 Skin Care Tips: ஏலக்காய் சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. சரும அலர்ஜி பிரச்சனையையும் நீக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், தோல் பராமரிப்புக்கு பெரிய ஏலக்காயை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிக. பெரிய ஏலக்காயினால் உங்கள் சருமமும் ஊட்டமளிக்கும் உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக்கும். சருமத்திற்கு பெரிய ஏலக்காயின் நன்மைகள்:   ஏலக்காய் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உணவின் சுவையை அதிகரிக்க மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரிய ஏலக்காய் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இதில் உள்ள பல ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரிய ஏலக்காயைப் பயன்படுத்துவது சருமத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சருமத்திற்கு ஏலக்காயின் நன்மைகள்:  இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: ஏலக்காய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பெரிய ஏலக்காய்

Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க என்ன செய்ய வேண்டும்....

Image
 உடல் எடையை குறைக்க விரும்பினாலும், சிலருக்கு அதற்கான ஜிம் போகுதல், உடற் பயிற்சி செய்தல் போன்றவற்றுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கலாம். அது போன்றவர்கள் தினசரி பழக்கத்தில் செய்யும் சில சிறிய மாற்றங்கள் போதும். இந்த விஷயங்களை கவனித்தில் கொள்ளுங்கள் வெந்நீரில் எலுமிச்சையை கலந்து குடியுங்கள் சீரகம் தண்ணீர் பயன் தரும் உடல் எடையை குறைக்க விரும்பினாலும், சிலருக்கு அதற்கான ஜிம் போகுதல், உடற் பயிற்சி செய்தல் போன்றவற்றுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில், உடல் எடை அதிகரிப்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதில், மக்கள் அதிகளவில் உடல் பருமனாகி வருகின்றனர். அதே நேரத்தில், உடல் பருமனுடன், உடலில் கெட்ட கொழுப்பு சேரத் தொங்குவதால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதற்கு, மக்கள் உடற்பயிற்சிகளுடன் உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடல் பருமனுக்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை கோளாறுகளே. இதனால், மக்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப் படுகின்றனர். மறுபுறம், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. எனவ

உங்களுக்கு வயிறு உப்புசமும் , அசிடிட்டி பிரச்சனையும் அடிக்கடி வருதா? இதனை எப்படி சரி செய்யலாம்?

Image
 பொதுவாக இன்றைக்கு பலருக்கு உள்ள ஒரு பிரச்சினையாக அசிடிட்டி இருக்கின்றது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவ தால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். இதனை எளியமுறையில் கூட சரி செய்யலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.     * இஞ்சி செரிமான மண்டலத்தில் உள்ள வாயுவை வெளியேற்ற உதவுகிறது. எனவே வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீ தேன் கலந்து குடித்து வரலாம். * ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். காலையில் வெறும் வயிற்றில் சீரக விதைகளை சாப்பிடுவது சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.  * தினமும் ஒரு கப் புதினா தேநீர் குடித்து வருவது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. * உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பெருஞ்சீரக விதைகள் கொண்டு தேநீர் போட்டு குடித்து வரலாம். * முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம். * சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்க

ஒரு கேக் துண்டு 27,000 ரூபாய்.. 41 ஆண்டு பழைய கேக்கில் அப்படி என்ன இருக்கு? இதுதான் விவரம்!

Image
 41 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட அந்த கேக் அதனுடைய ஒரிஜினல் பேக்கிங்கில் இருக்கிறது. டோரி மற்றும் ரீஸ் வலைத்தளம் அதில் தங்களது அரசு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கைகளால் எழுதப்பட்ட ஒரு குறிப்பும் இருந்துள்ளது . அரச குடும்பத்தினர் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாழும் அரசர்கள் பற்றிய செய்திகள் அனைத்துமே விரும்பி படிப்போம். தற்போதுவரை அரச குடும்பத்தினர் என்ற வழக்கத்தை பின்பற்றி வரும் இங்கிலாந்து நாட்டைப் பற்றி வரும் செய்திகள் அனைத்துமே வைரலாக இருக்கும். சமீபத்தில் மறைந்த இங்கிலாந்து அரசி பற்றிய பலவிதமான செய்திகள் இணையம் முழுவதும் பகிரப்பட்டன. இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பொருள் ஏலத்திற்கு வருகிறது! அரச குடும்பத்தினர் சார்ந்த, ஏலத்துக்கு வரும் அந்த ஒரு பொருள் என்ன என்பதைக் கேட்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்! 41 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1981 ஆம் ஆண்டு தற்போது இங்கிலாந்து நாட்டின் அரசராக இருக்கும் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவின் திருமண

10 நாட்களில் தொப்பையை கரைக்க உதவும் ஜப்பானிய டெக்னிக்..! எப்படி இது சாத்தியம்..?

Image
 உடலின் வேறு எந்த பாகங்களிலும் இருக்கும் கொழுப்பை விட வயிற்றில் இருக்கும் தொப்பையை கரைப்பது நினைப்பதை விட கடினமே. ஆனால் 10 நாட்களுக்குள் அடிவயிற்றை உங்கள் விருப்பப்படி மாற்ற கூடிய ஒரு ஒர்கவுட் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், தொப்பையற்ற நல்ல ஃபிளாட்டான வயிறை பெறவும் யாருக்கு தான் விருப்பம் இருக்காது.!! ஜிம் அல்லது வீட்டில் பல மணிநேரம் வியர்வை மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியை ஃபிட்டாக வைத்து கொள்வதில் உடற்பயிற்சி ஆர்வலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக க்ரஞ்ச்ஸ், சிட்-அப்ஸ் என பலவகை வொர்கவுட்களை முயற்சிக்கிறார்கள். ஆனால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பை அவ்வளவு எளிதில் கரைக்க முடியாது. உடலின் வேறு எந்த பாகங்களிலும் இருக்கும் கொழுப்பை விட வயிற்றில் இருக்கும் தொப்பையை கரைப்பது நினைப்பதை விட கடினமே. ஆனால் 10 நாட்களுக்குள் அடிவயிற்றை உங்கள் விருப்பப்படி மாற்ற கூடிய ஒரு ஒர்கவுட் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் உண்மையில் தொப்பையை கரைத்து மற்றும் வயிற்று பகுதியை ஃபிட்டாக வைக்க ஈசியாக உதவுகிறது ஒரு பிரபல ஒர்கவுட். ஆம

எவ்வளவு சளி இருந்தாலும் முறித்து எடுக்கும் மிளகு கஷாயம்... எப்படி போட வேண்டும்..?

Image
  black pepper kashayam : இப்போது பனி, மழை என இரண்டுமே மாறி மாறி இருப்பதால் பலருக்கும் இந்த பருவ மாற்றத்தை எதிர்கொள்ளும் சக்தி குறைவாகவே உள்ளது. எனவே இதுபோன்ற சமயத்தில் மிளகு உங்களுக்கு கைக்கொடுக்கலாம். மிளகுக்கு ’Black Gold’ என்கிற செல்லப் பெயரும் உண்டு. அதனால்தான் அதன் விலையும் அதிகமாக உள்ளது. காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் . அதன் மருத்துவ குணங்களில் பிரதானமான பலன் சளி , இருமலை விரட்டி அடிப்பதுதான். அந்த வகையில் இப்போது பனி, மழை என இரண்டுமே மாறி மாறி இருப்பதால் பலருக்கும் இந்த பருவ மாற்றத்தை எதிர்கொள்ளும் சக்தி குறைவாகவே உள்ளது. எனவே இதுபோன்ற சமயத்தில் மிளகு உங்களுக்கு கைக்கொடுக்கலாம். அந்த வகையில் இந்த மிளகு கஷாயத்தை வீட்டிலேயே செய்து குடித்து பாருங்கள். மிளகு நன்மைகள் : கருப்பு மிளகில் வைட்டமின்கள், விட்டமின் சி, பி6 மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துகள் நிறைவாக உள்ளன. அதோடு ஜிங்க், சோடியம் , மக்னீசியம், பொட்டாசியம் , பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களும் மிளகில் நிறைவாக உள்ளன. குறிப்புக்கா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் மிளகில் ந

உங்கள் செல்போனில் சிக்னல் கோளாறு இருக்கா? சிக்னலை பூஸ்ட் செய்வது எப்படி?

Image
 ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை அதில் ஏற்படும் சிக்னல் கோளாறு தான்..! சிக்னல் அளவை பூஸ்ட் செய்ய எளிய வழிகள் என்ன? டவர் செல்போன் டவர் பிரச்சினையை ஓரளவு அகற்ற ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம். இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும். சிம் கார்டு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் கூட செல்போன் சிக்னல் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம். இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகலாம். பேட்டரி பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே பேட்டரியின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் தேவையில்லாத ஆப்ஸ்களை டிஸ் ஏபிள் செய்யலாம்.   ஆன்டெனா ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்

தோல் சுருக்கங்களால் கவலையா? இதனை சரி செய்ய இதோ சில டிப்ஸ்....

Image
 பொதுவாக வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. முகம், கை கால் போன்றவற்றில் சரும சுருக்கம் எளிதில் வந்துவிடுகின்றது. இதற்கு பல காரணம் கூறப்படுகின்றது. சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய சரும சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன. தற்போது இவற்றை பார்ப்போம்.   * மிக்ஸியில் அடித்த கனிந்த செவ்வாழைப் பழம் இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது சரும வறட்சியைத் தடுத்து, ஈரப்பதத்தைக் கொடுக்கும். * அவகோடா பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்து, முகத்தை நன்கு கழுவிய பின் அந்த அவகோடா பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், ஏற்கெனவே இருக்கும் சரும சுருக்கங்கள் குறைவதுடன், மேலும் சுருக்கம் வராது. * முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி, உலர்ந்து இறுகியதும் கழுவவும். வாரம் ஒ

ஓமம் நீரை குடிப்பதனால் கிடைக்கும் அற்புத மருத்துவ பயன்கள்! இந்த பிரச்சனைக்கு கூட தீர்வு....

Image
 ஓமம் பலரின் வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பச்சை ஓம விதைகளை சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. ஓமத்தை (Ajwin) நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். ஓமம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது. ஓமம் விதைகளில் உள்ள செயலில் உள்ள நொதிகள் செரிமான செயல்பாடுகளை அதிகரித்து இரைப்பை சாறுகளை வெளியிட உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து. இயற்கையாக உடல் எடையை குறைக்க விரும்பினால், தினசரி உணவில் ஓமம் விதைகளை சேர்த்துக்கொள்ளலாம். சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும்.  ALSO READ :  காய்ச்சலை குணமாக்கும் கஷாயம்

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்? அப்போ கட்டாயம் இவற்றை கடைபிடியுங்க....

Image
 ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்பவர்களுக்கும் ஒரு சில வழிகாட்டல்கள் உள்ளன. அவற்றை மறக்கமால் செய்து வருவது நல்லது. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம் உடற்பயிற்சிக்கு முன்  உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியலில் ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும். எப்போது சாப்பிடலாம் ?  உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். உடற்பயிற்சிக்குப் பின்  உடற்பயிற்சிக்குப் பின்னரும் சாப்பிட வேண்டும். நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு  பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.   அவற்றுக்குப் பதிலாக தண்ணீர், இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம். ALSO READ :  டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Image
 பொதுவாக நம்மில் பலருக்கு அதிகாலை எடுத்தவுடன் டீ காபி குடிப்பது வழக்கம். இது உடலுக்கு தினமும் புத்துணர்ச்சியை வழங்குகின்றது. இதனுடன் ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு சேர்த்து குடிப்பது இன்னும் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்கும் என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவை எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். * பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். * பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும். * மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. *  தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும். * பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்ட

காய்ச்சலை குணமாக்கும் கஷாயம் ....

Image
 இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம். எல்லா பருவநிலையிலும் காய்ச்சல் வருவது இயல்பானதுதான். நம் முன்னோர்கள் காய்ச்சல் வராமல் தடுப்பதிலும், காய்ச்சலால் சிரமப்படுபவர் களுக்கு கைவைத்தியங்களைச் செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர்.  அந்தவகையில், இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே இதைக் குடிக்கலாம்.  அவரவரின் வயதுக்கேற்ப காரம் மற்றும் இனிப்புச் சுவையை கூட்டிக் குறைத்து, தயாரிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்தக் கஷாயம் ஏற்றது. இதன் செய்முறை குறிப்பு இதோ… தேவையான பொருட்கள்:  இஞ்சி - உள்ளங்கை அகலத் துண்டு  உலர் திராட்சை - அரை கைப்பிடி  சர்க்கரை - 3 டீஸ்பூன்  மிளகு - கால் டீஸ்பூன்  ஏலக்காய் - 2  தனியா - கால் டீஸ்பூன்  பட்டை - சிறு துண்டு  லவங்கம் - 2  செய்முறை:  இஞ்சியின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உலர் திராட்சை, மிளகு, ஏலக்காய், தனியா, லவங்கம், பட்டை அனைத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து நன்றாக இடிக்கவும்

முகத்தில் வளரும் முடிகளை எளிதாக அகற்றலாம்....

Image
 முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்காக பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் போன்ற பல முறைகளை பெண்கள் கையாள்கின்றனர். இவை உடனடி தீர்வாக இருந்தாலும், இவற்றால் சருமம் சேதமடைவது, கடினமாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆகையால் முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது. முகப்பரு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அடுத்து பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான். இதற்கான காரணம் மற்றும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.  ஹார்மோன்கள்:  அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதனால் 'ஆன்ட்ரோஜன்' எனும் ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பு பெண்கள் உடலில் அதிகரிக்கும். இது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி, குரல் கரகரப்பாக மாறுதல், எடை அதிகரித்தல், கருப்பை நீர்கட்டிகள், தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.  மரபியல்:  ஆரோக்கியமான பெண்களுக்கு முகத்தில் முடிகள் அதிகமாக வளர்வதற்கு மரபு வழியும் காரணமாக இருக்கலாம். பாட்டி, அம்மா அல்லது பரம்பரையில் உள்ள பிற பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக

தலைவலிக்கு மருந்தாகும் உடற்பயிற்சிகள் ....

Image
 விரிப்பில் நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்களை நேராக நீட்டவும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல், தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பருவநிலை மாற்றம், வேலைப்பளு, உடல்நலப் பிரச்சினை, உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம், அதீத சிந்தனை, தூக்கமின்மை, நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு தலைவலி உண்டாகலாம். இதற்கு சில எளிய பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.  பயிற்சி 1:  கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, முழங்கால்களை மடக்காமல் விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பின்பு கைகளை தலைக்குமேல் மெதுவாக உயர்த்தவும். இப்போது இடுப்புப் பகுதியில் அழுத்தம் கொடுத்து, உடலை பின்புறமாக முடிந்தவரை வளைக்கவும். இப்போது மூச்சை உள் இழுத்தவாறு குதிகால்களை மெதுவாக உயர்த்தவும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும். பின்னர் மூச்சை வெளிவிட்டவாறு குதிகால்களை கீழே இறக்கி, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். 10 வினாடிகள் இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இப்பயிற்சியை தொடர்ந்து 5 முறை செய்யலாம்.

உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் நாடுகள் ....

Image
 இந்தியாவைப் போல, இந்திய மக்கள் வாழும் பல நாடுகளில் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்க நாடுகளைப் பற்றி பார்க்கலாம். * பிஜி தீவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளதால், அங்கு உற்சாகத்துடன், பட்டாசுகள் வெடித்தும், வீடுகளை அலங்கரித்தும், நண்பர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளித்தும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.  * இந்தோனேஷியாவில் தீபாவளியன்று இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள், வாணவேடிக்கை வெடித்தும் மக்கள் கொண்டாடுகின்றனர்.  * மலேசியாவில் 'ஹரி தீபாவளி' என்ற பெயரில், சிறிது வித்தியாசமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மக்கள் காலையில் எண்ணெய் குளியலுடன் அந்த நாளை தொடங்குகிறார்கள். பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மலேசியாவில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்பதால், இனிப்புக்கள் மற்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.  * மொரீசியசில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்துக்கள் என்பதால், அங்கு தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  * நேபாளத்தில் தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. நேபாளத்தில் தசைன் பண்ட

HAPPY DEEPAVALI

Image
 WISH YOU ALL                           HAPPY                                         DEEPAVALI

உங்களது கழுத்து கருப்பா அசிங்கமா இருக்கா? இதனை எப்படி எளிய முறையில் போக்கலாம்?

Image
 பொதுவாக நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்து பகுதிக்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்து நாளாடைவில் கருமையடைந்து விடுகின்றது. இதனை போக்க பலர் கண்ட கண் செயற்கை பொருட்களையே வாங்கி போடுகிறார்கள். இதனை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.  * ஒரு உருளைக்கிழங்கு துண்டை எடுத்து உங்கள் கழுத்தின் கருமையான பகுதிகளில் வட்ட இயக்கத்தில் சுமார் 5 நிமிடங்கள் தடவி, பின்னர் அந்த பகுதியை தண்ணீரால் கழுவ வேண்டும் * கற்றாழை இலைகளிலிருந்து பிழிந்த ஜெல்லை நீங்கள் நேரடியாக சருமத்தில் பயன்படுத்தலாம் அல்லது இலைகளை வெயிலில் உலர்த்தி, உலர்ந்த இலைகளைக் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம் * இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு துளி மஞ்சள் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் (அல்லது பால்) எடுத்து கலந்து இதனை உங்கள் கழுத்தில் தடவி, சுமார் பதினைந்து நிமிடங்கள் விட்டு, தண்ணீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை மீண்டும் செய்யலாம்.   * ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் 4 டேப

புளூடூத் மூடி.. திறக்க மொபைல் நம்பர் அவசியம்.. தீபாவளி சிறப்பு குளிர்பானத்தை அறிமுகப்படுத்திய கோகோ-கோலா!

Image
 கோகோ கோலாவின் டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அறிவிக்கும் விதமாக இந்த லாக் செய்யப்பட்ட பாட்டில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கோக் பாட்டில்களை கோகோ-கோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் முன்னணி கோலா விற்பனை நிறுவனமான கோகோ-கோலா,  வர உள்ள தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக தனது பாட்டிலில் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ப்ளூடூத் மூலமாக ஓபன் செய்யக்கூடிய மூடிகளை கொண்ட லிமிடெட் எடிஷன் கோக் பாட்டில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக் கால ஸ்பெஷலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிறப்பு புளூடூத் கேப் கோக் பாட்டிலை, சாதாரணமாக ஓபனர் கொண்டு திறக்க முடியாது. பரிசைப் பெறுபவர் மற்றும் பரிசை வழங்குபவர் சந்திக்கும் போது மட்டுமே பாட்டிலை திறக்க முடியும். ஏனெனில் பாட்டிலை பரிசாக அனுப்பியவரின் மொபைல் போன் அருகில் இருந்தால் மட்டுமே பாட்டிலை திறக்க முடியும். சமூக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய திட்டத்தை கோகோ கோலா திட்டமிட்டுள்ளது. கோக்கின் சமீபத்திய #Milke

ஊர் சொன்ன குறையை வைத்தே உலக பிரபலமாக மாறிய பெண்! கண் கலங்கும் கதை இதுதான்!

Image
 தன்னுடைய குறையை நினைத்து மூலையில் முடங்கிவிடாமல் அதையே ஒரு கருவியாக எடுத்துக்கொண்டு உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பது மிக மிக அரிதானது! உலக அழகிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அழகு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் வேறுபடும். தோற்றத்தின் அழகு காலம் செல்ல செல்ல குறைந்து போகும். பளபளப்பான சருமம், சுண்டியிழுக்கும் தோற்றமும், நாசி, பெரிய கண்கள் என்று வெளிப்புற பார்வைக்கு தெரிவது நாட்கள் செல்ல செல்ல மங்கி விடும். உண்மையான அழகென்பது ஒரு நபரின் குணம், எப்படி நடந்து கொள்கிறார், அவருடைய வாழ்க்கை எவ்வாறு இன்ஸ்பையரிங் ஆக இருக்கிறது என்பதன் அடிப்படையில் தான் இருக்கும். உலகின் அசிங்கமான பெண் என்று அழைக்கப்படும் மேரியின் கதையைக் கேட்டால், இவரை விட உலகின் அழகான இருக்க முடியாது என்று கண்கள் கலங்கும். உலகின் மிக அசிங்கமான பெண் என்று கூறப்பட்ட மேரி ஆன் பீவன் என்ற பெண்மணி கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்! இவருடைய கதை கண்களை கலங்க வைக்கும். 1874 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தான் மேரி. இவருக்கு 28 வயதாக இருக்கும் போது, திருமணம் நடந்தது மற்றும் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பி