மன ஆரோக்கியத்துக்கு உதவும் 'அரோமா தெரபி'

 வாசனையை நுகரும்போது தன்னிச்சையாக புன்னகைப்பது, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை சொல்லலாம்.


நல்ல வாசனையை நுகரும்போது இயல்பாகவே மனதில் மகிழ்ச்சியும், அமைதி நிலையும் உண்டாகும். மூக்கில் உள்ள 'சிலியா' என்ற மெல்லிய முடிகள்தான், இந்த வாசனையை நுகர்ந்து மூளையில் உள்ள 'லிம்பிக்' சிஸ்டத்துக்கு கொண்டு செல்லும். 

அந்த வாசனையின் தன்மைக்கு ஏற்றபடி மனதும், உடலும் செயல்படும். உதாரணமாக பூக்களின் வாசனையை நுகரும்போது தன்னிச்சையாக புன்னகைப்பது, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை சொல்லலாம். அந்த வகையில், இயற்கை நறுமண எண்ணெய்கள் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறைக்கு 'அரோமா தெரபி' என்று பெயர். 

பெரும்பாலும் இதில் லாவெண்டர், டீ ட்ரீ, லெமன், பெப்பர்மிண்ட் ஆகிய எண்ணெய்கள் பயன்படுகிறது. மல்லிகை, ரோஜா, லவங்கப் பட்டை, சந்தனம், ஆரஞ்சு, இஞ்சி, பாதாம் போன்றவற்றிலிருந்தும் அரோமா எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.

 இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெய்யை நான்கு சொட்டுகள் எடுத்து சிறிது தண்ணீருடன் கலந்து, அதிலிருந்து வெளிவரும் வாசனையை தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை நுகர வேண்டும். இதுவே அரோமா சிகிச்சை முறை. இதன் மூலம் மன ஆரோக்கியம் மேம்படும்.

இந்த வாசனை எண்ணெய்கள் பூக்கள், இலை, காய், கனி, விதை, பட்டை, பிசின், வேர் என தாவரங்களின் அனைத்து பாகங்களில் இருந்தும் பிரித்தெடுக்கப்படும் திரவங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. வாசனை எண்ணெய்களை குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது உடலில் வலி உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

 இசையைக் கேட்டபடியும், புத்தகம் படித்தவாறும், யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும்போதும் இந்த தெரபியை மேற்கொள்ளலாம். இந்த எண்ணெய்யை ஆவியாக்கி புகை மூட்டலாம்.

 இந்தப் புகை பரவும் இடத்தில் உள்ள கிருமிகள் நீங்கும். உடனடி புத்துணர்வு தரும். பதற்றத்தைக் குறைத்து மன அமைதிக்கு வழிவகுக்கும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, உடல் முழுவதும் சீரான ரத்தம் பரவ உதவும். மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும். வயிற்றுப் பிடிப்புகள், தலைவலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் முதுகு வலி போன்ற உடல் வலிகளைக் குறைக்கும்.

 நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும். தூக்கம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் லாவெண்டர் எண்ணெய்யையும், சருமப் பிரச்சினைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டீ ட்ரீ ஆயிலையும், அடிக்கடி மன மாற்றம் அல்லது நிலையற்ற உணர்ச்சி வெளிப்பாடு இருப்பவர்கள் மல்லிகைப்பூ எண்ணெய்யையும், மறதி மற்றும் தலைமுடி பிரச்சினைகள் உள்ளவர்கள் லவங்க பட்டை எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.






Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....