Posts

Showing posts from November, 2022

Whatsapp கொண்டுவந்த அதிரடி அப்டேட்! இனி நமக்கு நாமே மெசேஜ் அனுப்பலாம்......

Image
 whatsapp அதிரடியாக மெசேஜ் யுவர்செல்ப் ( Message Yourself) என அழைக்கப்படும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் பொருந்தும். இந்த அப்டேட்டை பயன்படுத்தி யூசர்கள் தங்களுக்கென சில குறிப்புகளை எடுத்துக் கொள்ள முடியும். இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக whatsapp இல் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சிலருக்கு உடனடியாகவும் சிலருக்கு சில வாரங்களிலும் வேலை செய்யும் எனவும் குறிப்பிடப்பிட்டுள்ளது. புதிய மெசேஜ் Message Yourself அம்சத்தை இயக்குவது எப்படி? whatsapp -ஐ திறக்கவும்  புதிய சாட்-ஐ உருவாக்க வேண்டும்  உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட் மொத்தமும் திரையில் தோன்றும் அந்த லிஸ்டில் உங்களுடைய மொபைல் நம்பரும் மெசேஜ் செய்வதற்கு உண்டான லிஸ்டில் தோன்றும்.  உங்களுடைய மொபைல் எண்ணை கிளிக்

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!

Image
 இன்றைய காலத்தில் பலரும் வயிற்று கொழுப்பு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக டயட்டுகள், கண்ட கண்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உண்மையில் வீட்டில் இருந்தப்படி கூட வயிற்று கொழுப்பை எளியமுறையில் கரைக்கலாம். அந்தவகையில் வயிற்றின் கொழுப்பை எளிய முறையில் கரைக்க கூடிய 5 உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.  பை சைக்கிளிங் சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் வரை எரிக்கலாம். ரிவர்ஸ் கிரஞ்ச் இந்த பயிற்சி வயிற்று பகுதியின் முதன்மை தசைகளை வலுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின் போதும், மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும்.  வெர்டிக்கல் லெக் கிரஞ்ச் உடலை கிடைமட்டமாக வைத்துக் கொண்டு, கால்களையும், தலைப்பகுதியையும் உயர்த்தி இறக்க வேண்டும். இதன்மூலம் அடி வயிற்று பகுதி கடினமடையும். உடற்பயிற்சி பால் கிரெஞ்ச் இந்த உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு நல்ல உடல் வலு தேவைப்படும். இதற்காக ஒரு உடற்பயிற்சி பந்து வாங்கி கொள்ள வேண்டும்.   ALSO READ :  உடல் எடை உடனடியா குறையணுமா?

இஞ்சி- பூண்டு விழுதில் இவ்வளவு அற்புத நன்மைகள் உள்ளதா? அவசியம் தெரிஞ்சிகோங்க....

Image
 பொதுவாக காலங்காலமாக அன்றாட சமையல் முதல் பிரியாணி வரை ஒவ்வொரு உணவிற்கும் அதிக சுவையை சேர்க்க பயன்படும் ஒரு அற்புத பொருள் தான் இஞ்சி-பூண்டு விழுது. பெரும்பாலான குடும்பங்கள் பல்வேறு உணவுகளில் இஞ்சி-பூண்டை சேர்த்து வருகிறார்கள். குறிப்பாக வீடுகளில் இயற்கையாக அரைக்கும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் பல உணவுகளின் சுவையை அதிகரிக்கிறது. இது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் அந்தவகையில் இரண்டையும் சேர்க்கும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   * வயிற்றுப்போக்கைக் குறைக்கவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், உடல் சரியாக செயல்படவும் உதவுகிறது. * கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டில் நச்சுகளை அகற்றcancecவும் உடலை நச்சுத்தன்மையாக்கவும் உதவும். * இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இது உங்கள் உடலை சூடாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். * தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் விநியோகத்தை அதிகரிப்பதற்கும

வியக்க வைக்கும் மனித உடல் அதிசயங்கள்...

Image
 மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும் தான். *மனித உடலின் மூலப்பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை.  *மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும் தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், அவனது காது, ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு இருக்கும்.  *ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் (முடி) எண்ணிக்கை, சுமார் 5 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள், உள்ளங்கையும், உள்ளங்காலும்தான்.  *பொதுவாக மனிதர்கள் இரவு வேளையில் தூங்கும்போது மட்டும்தான் கண்களை மூடியிருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் பகல் வேளையில் விழித்திருந்தாலும் கூட, ஆயிரக்கணக்கான முறை நம்முடைய கண்களை சிமிட்டுகிறோம். இதை ஆய்வு செய்து பார்த்தால், இரவைத் தவிர பகல் வேளையிலும் கூட பாதி நேரம் நாம் கண்களை மூடிக்கொண்டுதான்

ஆளை அசத்தும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி செய்யலாமா....

Image
  சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம். ஐய்யங்கார் வீட்டு சாம்பார் ஆளை அசத்தும் சுவையில் இருக்கும். தேவையான பொருள்கள் தனியா - கால் கிலோ குண்டு மிளகாய் - 125 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகு - 25 கிராம் வெந்தயம் - 10 கிராம் விரளி மஞ்சள் - 25 கிராம் செய்முறை மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். பின்னர் தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம். சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள். அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்கக்கூடாது. அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி. ALSO READ :  சத்தான அரைக்கீரை வடை! செய்வது ரொம்ப

முருங்கையின் மகத்துவம்! முருங்கையின் அனைத்து பாகங்களும் மாமருந்து!

Image
 பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளின் ஒன்றான முருங்கை, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. முருங்கையில் உள்ள பைட்டோ கெமிக்கல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை முருங்கை பூர்த்தி செய்கிறது. வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால், உடலில் ஆற்றல் நிலை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது, இறைச்சி மற்றும் மீன் உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு, முருங்கை ஒரு வரப்பிரசாதம். இதில் புரதச் சத்து அதிகம் உள்ளது. முருகைக்காயின் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். முருங்கைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் 1. முருங்கையில் உள்ள பைட்டோ கெமிக்கல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதனுடன், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் ப

உடல் எடை உடனடியா குறையணுமா? இரவில் இந்த மேஜிக் பானங்களை குடிங்க!!

Image
 Weight Loss Tips: கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலும், ஜிம்மிற்கு செல்லாமலும் கூட உடல் எடையை குறைக்க முடியும்.  எடை இழப்புக்கு வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரவில் வெந்தய நீர் அருந்துவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய நீர் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்கும் பானங்கள் :  இன்றைய காலத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பருமனான உடல் வாகை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில், உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. எனினும், உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சியை தவறாமல் செய்வது ஆகியவற்றை அனைவராலும் செய்ய முடிவதில்லை.  அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலும், ஜிம்மிற்கு செல்லாமலும் கூட உடல் எடையை குறைக்க முடியும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் இரவில் சில ஆரோக்கியமான பானங்களை குடிக்கத் தொடங்குங்கள்.

சத்தான அரைக்கீரை வடை! செய்வது ரொம்ப எளிது...

Image
 மாலை நேரம் வந்துவிட்டாலோ எதையாவது எடுத்து கொரிக்கவே தோன்றும், அந்நேரம் துரித உணவுகளின் பக்கம் செல்லாமல் மிக எளிதாக அதுவும் வீட்டிலேயே செய்யக்கூடிய கீரை வடை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை ஆரோக்கியமான வாழ்வுக்கு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள். ஏனெனில் கீரையில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. அரைக்கீரையானது ஆரம்ப கட்ட மனநோயை சரிசெய்யும் சக்தி கொண்டது, இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் அரைக்கீரை நரம்புகளை பலப்படுத்தும், சித்த வைத்தியத்தில் முக்கிய கீரையாக பார்க்கப்படும் அரைக்கீரையை கொண்டு வடை செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் அரைக்கீரை- ஒரு கப் (பொடியாக நறுக்கியது) வெங்காயம்- ஒரு கப் (பொடியாக நறுக்கியது) உளுத்தம்பருப்பு- அரை கப் கடலைப்பருப்பு- அரை கப் இஞ்சி- ஒரு துண்டு காய்ந்த மிளகாய்- 5 (காரத்திற்கு ஏற்ப) சோம்பு- ஒரு டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு செய்முறை உளுத்தம் பருப்பு, கடல

WhatsApp-ல் ப்ளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி? 2 எளிதான ட்ரிக்ஸ்........

Image
 வாட்ஸ் அப்பில் நம்மை ப்ளாக் செய்தவர்களும் நம்மால் மெசேஜ் அனுப்ப முடியும். இதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது. புதிய குரூப் மூலம் இதை மேற்கொள்ள நமக்கு தெரிந்தவர் உதவி தேவைப்படும். அவர்களிடம் ஒரு குரூப் தொடங்க சொல்லி அதில் உங்களையும், உங்களை பிளாக் செய்தவரையும் இணைக்க வேண்டும். இப்போது, அந்த குரூப்பில் நீங்கள் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும், உங்களை பிளாக் செய்தவருக்கும் விசிபிள் ஆகும். இதை வைத்து, அவர்களிடம் கோரிக்கை வைத்து அல்லது மன்னிப்பு கேட்டு, அன்பிளாக் செய்யுமாறு நீங்கள் கேட்கலாம். சரி, மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம் என நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்ஸில் ‘டெலீட் அக்கவுண்ட்’ என கொடுத்து, அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யவும். ஃபோனில் மீண்டும் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து, மீண்டும் அக்கவுண்ட் தொடங்கவும். ஆப் ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால், உங்களை பிளாக் செய்த நபருக்கும் நீங்கள் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால், வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலீட் செய்யும்போது, அனைத்து குரூப்புகளில் இருந்தும் நீங்கள் வெளியேறி விடுவீர்கள் என்பதை மறவாதீர்கள்.  ALSO READ :  வாட்ஸ்அப்பில் இருக்கும்

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....

Image
 பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி வாய்ப்புண் வருவதுண்டு. இது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. இதற்கு சில எளிய வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.  * தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும். *  ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமையும். * 2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்கவும். *  1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் போதும்! நோய் நொடி இல்லாத வாழ்க்கை.....

Image
 கீரைகளில் பலவகைகள் உள்ளன, எல்லா வகையான கீரைகளிலும் ஏதேனும் சத்துக்கள் நிச்சயம் நிறைந்திருக்கும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள் தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்திருக்கும் மூக்கிரட்டை கீரை குறித்து உங்களுக்கு தெரியுமா?  மூக்கிரட்டை கீரை யாரும் விதை போட்டு வளர்வதில்லை. தானாக வேலிகளில் சாதாரணமாக தரைகளில் வேர் விட்டு வளர்ந்து கிடக்கும். இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். மூக்கிரட்டை கீரை இதற்கு அதிமருந்தாகும். சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். மூக்கிரட்டை கீரை இதற்கு

நீங்கள் நீண்ட காலம் இளமையாக தெரியணுமா? இந்தவொரு பருப்பை இப்படி பயன்படுத்தி பாருங்க!! விரைவில் பலன் தரும்....

Image
 இன்றைய காலத்தில் பலரும் முகத்தை அழகாக வைத்த கொள்ள வேண்டும் என்று நினைத்து பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி முகத்தை மேலும் பாழாக்குகின்றனர். அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிய முறையில் முகத்தை இளமையுடன் வைத்து கொள்ள முடியும். அதற்கு மைசூர் பருப்பு உதவுகின்றது. இது சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி, சரும நிறத்தை மேம்படுத்த உதவுவதோடு, சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ளும். அந்தவகையில் மைசூர் பருப்பை எதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.     * ஒரு டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகப்பரு பிரச்சனையைத் தடுக்கலாம். * ஒரு பௌலில் மைசூர் பருப்பு பொடி மற்றும் கடலை மாவை சமஅளவில் எடுத்து, காய்ச்சாத பாலை ஊற்றி பேஸ்ட் செய்ய வேண்டு

உடல் எடையை சட்டென குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி! தினமும் 5 நிமிடங்கள் இதை செய்தாலே போதுமாம்....

Image
 இன்றைய காலத்தில் பலருக்கு பெரும் தலையிடியாக உள்ள பிரச்சினை தான் உடல் எடை. அதிலும் பலர் வயிற்று பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க போராடி வருகின்றனர். வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க ஏராளமான பயிற்சிகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஜப்பானிய 'டவல் உடற்பயிற்சி. இது ஜப்பானின் புகழ்பெற்ற மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி புகுட்சுட்ஸியால் இந்தப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இது உடல் எடையைக் குறைப்பதுடன் பல ஆரோக்கிய பலன்களையும் அள்ளித்தருகின்றது. தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.   செய்முறை *  கை, கால்களை நன்றாக நீட்டி தளர்த்திய நிலையில், தரையில் விரிக்கப்பட்ட பாயின் மேல், மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக்கொள்ளுங்கள். * தொப்புளுக்கு நேர் கீழே, முதுகுக்கு அடியில், ஒரு டவலை நன்றாக சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள். * கால்கள் இரண்டையும் 10 செ.மீ. இடைவெளியில் நகர்த்தி, தோள்பட்டை தரையில் படுமாறு வைத்திருங்கள். * கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையைப் பார்த்தவாறு இருப்பதுபோல் செய்யுங்கள். * இந்த நிலையில் கு

ஹெல்தியான ஓட்மீல் உருண்டைகள்! வீட்டிலேயே செய்வது எப்படி?

Image
 ஓட்மீல் பால்ஸ் நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடிந்த ஒரு நொறுக்கு தீனியாகும். மேலும் இது ஒரு நான் பேக்கிங் உணவு போர்லாக இருப்பதால் உடலுக்கு கெடுதல் செய்யாத ஆரோக்கியமான உணவு நொறுக்கு தீனியாக இருக்கும். ஓட்மீல் பால்ஸ் நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடிந்த ஒரு நொறுக்கு தீனியாகும். மேலும் இது ஒரு நான் பேக்கிங் உணவு போர்லாக இருப்பதால் உடலுக்கு கெடுதல் செய்யாத ஆரோக்கியமான உணவு நொறுக்கு தீனியாக இருக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு தின்பண்டமாக அமையும். மேலும் சர்க்கரைக்கு பதிலாக நாம் இதில் தேன் பயன்படுத்தி இனிப்பு சுவையைக் கூட்டுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இதனை உண்ணலாம். தேவைப்பட்டால் பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து சமைக்கலாம். மற்ற உணவு பொருட்களை போல கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சமைத்துக் கொண்டிருப்பதோ அல்லது மைக்ரோவேவ் ஓவனில் வைத்து மணி கணக்கில் காத்திருப்பதோ தேவையில்லை. வெறுமனே இந்த ஓட்மீல் பால்களை செய்து பிறகு குளிர் சாதன பெட்டியில் வைத்து

உலகின் காஸ்டலி காய்கறி இது தான்... ஒரு கிலோவின் விலையை கேட்டால் ஆடி போவீங்க

Image
  இந்த காய் மார்க்கெட்டில் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. இதற்கான டிமாண்ட் காரணமாக இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. நாளுக்கு நாள் ஏறி கொண்டே போகும் விலைவாசியில் நம்முடைய அத்தியாவசிய தேவையான உணவுகளை ஆரோக்கியமாக மாற்றும் காய்கறிகளும் அடக்கம். மிகவும் விலை மலிவாக விற்கப்படும் காய்கள் கூட சூழலை பொறுத்து ராக்கெட் வேகத்தில் உயர்வதை நாம் கண்கூடாக காண்கிறோம். உணவுகளுக்கு அடிப்படையான காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் வகையில் உயரும் போது நாம் அனைவரும் வருத்தப்படுகிறோம் இல்லையா.! அதே சமயம் எப்போதுமே விலையுயர்ந்த பழங்கள், காய்கறிகள் அல்லது விளைபொருட்கள் என்று வரும்போது அந்த பட்டியலில் குங்குமப்பூ, ஹிமாலயன் காளான் மற்றும் டிராகன் பழங்கள் உள்ளிட்ட சில தான் பொதுவாக உடனே நம் நினைவிற்கு வரும். ஆனால் மிகவும் காஸ்ட்லி என்று நாம் கருதும் குறிப்பிட்ட இந்த சில பொருட்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கான பன்மடங்கு விலையில் ஒரு காய் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.! Hop shoots என்னும் காய்கறி தான் உலகின் மிகவும் காஸ்டலி வெஜிடபிள் என குறிப்பிடப்படுகிறது. இதன் இமாலய விலையின் முன் நீங்கள் மிகவும் விலையுயர்ந்

ரவை இருந்தால் போதும் டின்னருக்கு மொறு மொறுனு அடை தயார்... ரெசிபி இதோ...

Image
  வீட்டில் எந்த பொருளுமே இல்லை ஆனாலும் ருசியாக இரவு உணவை செய்து அசத்திட வேண்டும் என நினைக்கிறீர்களா..? கவலைய விடுங்கள். இந்த ரவை அடை தோசை உங்களுக்கு கைக்கொடுக்கும். இரவு என்ன செய்வதென்று தெரியவில்லையா..? வீட்டில் எந்த பொருளுமே இல்லை ஆனாலும் ருசியாக இரவு உணவை செய்து அசத்திட வேண்டும் என நினைக்கிறீர்களா..? கவலைய விடுங்கள். இந்த ரவை அடை தோசை உங்களுக்கு கைக்கொடுக்கும். உங்களுக்கான ரெசிபி இதோ... தேவையான பொருட்கள் : ரவை - 1 கப் அரிசி மாவு - 2 tbsp தயிர் - 2 tbsp உப்பு - தே.அ சீரகம் - 1 tsp வெங்காயம் - 1 கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 கேரட் துருவல் - 1 கைப்பிடி மஞ்சள் தூள் - 1/4 tsp செய்முறை : பாத்திரத்தில் ரவை , அரிசி மாவு, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின் கொஞ்சம் அடை பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்துக்கொள்ளுங்கள். பின் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை என மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். மாவின் பதம் அடை மாவு பதத்திற்கு தண்ணீர் இருக்க வேண்டும். மாவு தயாரானதும் தோசை கல் வைது ஒரு கரண்டி மாவு எடுத்து கெட்டியான அடை போல் சுற்ற வேண்டும். இ

சப்பாத்திக்கு சுவையான மூக்கடலை குருமா செய்ய தெரியுமா..? நொடியில் செய்ய ரெசிபி...

Image
  இந்த ரெசிபியை பின்பற்றி சமையுங்கள். வீட்டில் இருப்போரை ருசியால் அசத்துங்கள். இரவு உணவிற்கு சைட் டிஷ் என்ன சமைப்பது என யோசனையாக இருந்தால் உடனே மூக்கடலையை ஊற வையுங்கள். இந்த ரெசிபியை பின்பற்றி சமையுங்கள். வீட்டில் இருப்போரை ருசியால் அசத்துங்கள். தேவையான பொருட்கள் வெள்ளை மூக்கடலை - 1/2 கப் வெங்காயம் - 1 தனியா பொடி - 1/2 tsp கரம் மசாலா - 1/2 tsp சீரகப் பொடி - 1/2 tsp மஞ்சள் பொடி - 1/2 tsp கடுகு - 1/2 tsp கருவேப்பிலை -சிறிது எண்ணெய் - 2 tsp செய்முறை இரவு முழுவதும் மூக்கடலையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மூக்கடலையை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். குழையக் கூடாது கடாயை தீயில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடவும். அடுத்ததாக வெங்காயம் சேர்த்து அதோடு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதோடு தனியா பொடி, சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து வதக்கவும். பொடிகளின் பச்சை வாசனை போனதும், வேக வைத்த மூக்கடலையைச் சேர்க்கவும். குக்கரில் வேக வைத்த நீர் இருந்தாலும் அதையும் சேர்த்து ஊற்ற வ

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இரவில் சாப்பிட வேண்டிய உணவுகளின் லிஸ்ட்..!

Image
 பொதுவாக மதிய உணவை விட இரவு நேரத்தில் குறைவான அளவு உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும் என்பதால் அதிக புரதம் கொண்ட பருப்பு சூப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இன்றைக்கு மாறிவரும் உணவு பழக்கவழக்களால் உடல் எடை அதிகரிப்பது என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. உடல் பருமனால் மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு, டயட் என பலவற்றை மேற்கொண்டாலும் பலர் தோல்வியைத் தான் சந்திக்கிறார்கள். இதனையடுத்து பலர் இரவில் சாப்பிட்டால் தொப்பை போடும் என்பதால் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. மதிய வேளையில் அதிகமாக சாப்பிட வேண்டும் எனவும் அதே நேரம் இரவில் சாப்பாட்டின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதிக புரதம், குறைந்த கலோரி கொண்ட ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுவதால், இரவில் என்னென்ன உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்? அதை எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்வோம். உடல் எடையைக்க

அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில வழிமுறைகள்....

Image
 நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது.  ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இந்தப் பிரச்சினையை வீட்டுச் சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.  வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும். இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.  இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும்.  ஏப்பத்தைக் கட்டுப்படு

நாவூறும் சுவையுடன் சிக்கன் லாலிபாப் மசாலா.....

Image
 குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்   சிக்கனை ஊறவைக்க...  சிக்கன் லெக் பீஸ் - 7  சோயா சாஸ் - 1 டீஸ்பூன்  மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்  தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்  எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  மிளகு தூள் - 1 டீஸ்பூன்  முட்டை - 1  சோள மாவு - 1 டீஸ்பூன்  மைதா - 1 டீஸ்பூன்  எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு  சாஸ் செய்ய எண்ணெய் - 2 டீஸ்பூன்  பூண்டு - 2 பல்  இஞ்சி - 2  சிவப்பு மிளகாய் - 2  சோயா சாஸ் - 1 டீஸ்பூன்  மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்  தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்  தண்ணீர் - தேவையான அளவு  வெங்காய தால் - கார்னிஷ் செய்ய  செய்முறை  பூண்டு, சிவப்பு மிளகாய், வெங்காய தாள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.  முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி கெட்ச்அப், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், மு

சலிப்படையாமல் உடற்பயிற்சி செய்ய உதவும் மொபைல் ஆப்ஸ்.....

Image
 புதிது புதிதாய் சில ‘ஒர்க்-அவுட்’ ஆப்ஸ்களும் வந்திருக்கின்றன. இந்த ஆப்ஸ் ‘ஒர்க் அவுட்' செய்யும்போது சலிப்படையாமல் இருக்க உதவும். எப்போதும் ஒரே மாதிரியான 'ஒர்க் அவுட்' செய்யும்போது சலிப்படையாமல் இருக்க புதிது புதிதாய் சில 'ஒர்க்-அவுட்' ஆப்ஸ்களும் வந்திருக்கின்றன. இவற்றை 'டவுன்லோட்' செய்து வைத்துக் கொண்டால், பயிற்சிகளை சலிப்படையாமல் செய்யலாம்.  அதில் சில...  * 8 பிட் (8 fit)  '8 பிட்' ஆப் தேவைக்கேற்ப உடற்பயிற்சிகளையும், உணவுத் திட்டத்தையும் ஒன்றாக இணைத்துக் கொடுக்கிறது. இது நிறைய வழிகாட்டுதல், பரிந்துரைகள், நினைவூட்டல்கள் மற்றும் வழிமுறைகளை விரும்பும் நபர்களுக்கான சிறந்த ஒன்று. உடல் எடையை குறைப்பது, உடலை 'பிட்'டாக வைத்துக் கொள்வது அல்லது தசையை வலுவாக்குவது என இதில் எது உங்களுக்கு தேவையோ அதற்கேற்றவாறு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பிய உடலமைப்பை பெறும் வகையில், உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிக்கான தனிப்பட்ட திட்டமிடுதலையும் உருவாக்கி தருகிறது.  * பிலோகில்லேட்ஸ் (Blogilates)  அழகான மற்றும் சுறுசுறுப்பான தோற்றம் தனக்கு வேண்டும்

ஹோட்டல் சுவையில் கம கம வாசனையுடன் இட்லி சாம்பார் செய்ய தெரியுமா?

Image
 பொதுவாக காலை உணவு என்றாலே ஞாபகம் வருவது இட்லி - சாம்பார் தான். அந்தளவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காலையுணவு இதுவாகும். உடலுக்கு தேவையான புரதம், கார்போவைதரேட்டு அதிகம் உள்ளதால் இதனை காலையில் எடுத்துக் கொள்வதால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு வழிசமைக்கிறது. இட்லிக்கு சாம்பார் தான் சூப்பரான காமினேஷன் என்று கூறுவார்கள். இதன்படி சாம்பார்களில் உடுப்பி சாம்பார் , உருளைக்கிழங்கு சாம்பார், முள்ளங்கி சாம்பார் , முருங்கைக்காய் சாம்பார் என எண்ணற்ற வகைகள் காணப்படுகிறது. அந்த வகையில் ஹோட்டல் சுவையில் எவ்வாறு இட்லி சாம்பார் செய்வது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு - 1/2 கப் தண்ணீர் - 2 கப்  தக்காளி - 2 பச்சை மிளகாய் - 5 சின்ன வெங்காயம் - 5 பூண்டு - 2 மஞ்சள் தூள் 1/2 மேசைக்கரண்டி வெந்தயம் - 1 மேசைக்கரண்டி பெருங்காயம் - 2 துண்டு தாளிப்பு பொருட்கள் தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி சீரகம் - 1/4 மேசைக்கரண்டி வர மிளகாய் - 2 கறிவேப்பிலை - தேவையானளவு சின்ன வெங்காயம் - 4 உப்பு - தேவையானளவு சாம்பார் பொடி - 1/2 மே

வாட்ஸ்அப்பில் இருக்கும் சில மிரட்டலான ட்ரிக்ஸ்! தெரிந்துகொள்ளுங்கள்....

Image
 வாட்ஸ்அப்பில் இப்படியும் சில ட்ரிக்ஸ் இருக்கிறதா என ஆச்சரியமான அம்சங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி எண்ணற்ற அம்சங்களை நமக்கு வழங்குகிறது. வீடியோ மற்றும் ஆடியோ கால்ஸ்களை மேற்கொள்வது, பணம் செலுத்துவது, லொக்கேஷன் ஷேர் செய்வது, புகைப்படம், வீடியோ மற்றும் டாக்குமென்ட்ஸ்களை பகிர்வது மற்றும் 24 மணிநேரம் வரை நீடிக்கும் ஸ்டேட்டஸ்களை வைக்க அனுமதிப்பது உள்ளிட்ட பல அம்சங்களை வழங்குகிறது. வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸ் மற்றும் மெசேஜ் டெலிவரி ரிப்போர்ட்களை மறைக்க அனுமதிக்கிறது. நம்முடைய கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் சிலர் நம்முடைய Whatsapp Status- ஐ பார்க்க கூடாது என்று நினைத்தால் அவர்களை மட்டும் Hide செய்து விட்டு பிறர் பார்க்கும்படி status- ஐ வைக்கலாம். ஆனால் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் status- ஐ நீங்கள் பார்த்தால் அவர்களுக்கு நீங்கள் பார்ப்பது தெரிய கூடாது என்று நினைக்கிறீர்களா.? அதாவது அவர்கள் வைக்கும் வைக்கும் status- ஐ நீங்கள் ரகசியமாக பார்க்க நினைக்கிறீர்களா.? இதற்கான வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..? மற்றவ