ஹெல்தியான ஓட்மீல் உருண்டைகள்! வீட்டிலேயே செய்வது எப்படி?

 ஓட்மீல் பால்ஸ் நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடிந்த ஒரு நொறுக்கு தீனியாகும். மேலும் இது ஒரு நான் பேக்கிங் உணவு போர்லாக இருப்பதால் உடலுக்கு கெடுதல் செய்யாத ஆரோக்கியமான உணவு நொறுக்கு தீனியாக இருக்கும்.


ஓட்மீல் பால்ஸ் நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடிந்த ஒரு நொறுக்கு தீனியாகும். மேலும் இது ஒரு நான் பேக்கிங் உணவு போர்லாக இருப்பதால் உடலுக்கு கெடுதல் செய்யாத ஆரோக்கியமான உணவு நொறுக்கு தீனியாக இருக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், இது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு தின்பண்டமாக அமையும்.

மேலும் சர்க்கரைக்கு பதிலாக நாம் இதில் தேன் பயன்படுத்தி இனிப்பு சுவையைக் கூட்டுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இதனை உண்ணலாம். தேவைப்பட்டால் பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து சமைக்கலாம்.

மற்ற உணவு பொருட்களை போல கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சமைத்துக் கொண்டிருப்பதோ அல்லது மைக்ரோவேவ் ஓவனில் வைத்து மணி கணக்கில் காத்திருப்பதோ தேவையில்லை. வெறுமனே இந்த ஓட்மீல் பால்களை செய்து பிறகு குளிர் சாதன பெட்டியில் வைத்து சில மணி நேரங்கள் கழித்து எடுத்து பரிமாறலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

ஓட்ஸ் உருண்டைகள் 1 கப்

பீனட் பட்டர் ½ கப்

சாக்லேட் சிப்ஸ் ¼ கப்

அரைத்த ஆளி விதை பவுடர் ½ கப்

ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு தேன்

வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் 1 டீஸ்பூன்


செய்முறை:

ஓட்மீல் உருண்டைகள், அரைத்த ஆளி விதை பவுடர், பீனட் பட்டர், தேன், சாக்லேட் சிப்ஸ் மற்றும் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கவும். கிட்டத்தட்ட ஒரு கெட்டியான கலவையை போன்று நிலைக்கு வரும் வரை இதனை கலக்க வேண்டும்.

அதன் பின்பு, அந்த கலவையில் இருந்து நமக்கு விருப்பமான அளவில், சிறு சிறு ஓட்மீல் உருண்டைகளை செய்து ட்ரேயில் வைத்து விட வேண்டும். பிறகு அந்த ட்ரேவை எடுத்து குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் வரை ப்ரீசருக்குள் வைக்க வேண்டும். இதனால் ஓட்மீல் பால் உருண்டைகள் ஒரு நிலையான வடிவத்திற்கு வரும். 30 நிமிடங்கள் கழித்து குளிர் சார்ந்த பெட்டியில் உள்ள ஓட்மீல் உருண்டைகளை எடுத்து வீட்டில் எல்லோருக்கும் பரிமாறலாம்.

இவை உடலுக்கு கெடுதல் தரும் எண்ணெயில் பொறித்த சிப்ஸ், மற்றும் மைதா கொண்டு செய்யப்பட்டு பப்ஸ் ஆகியவற்றிற்கு மாற்றாகவும், குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் ஒரு நொறுக்கு தீனியாகவும் இருக்கும். மேலும் சிறியவர் ஒரு முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் இதனை சாப்பிடலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சில பொருட்களை சேர்த்து இந்த ஓட்மீல் உருண்டையை செய்யலாம்.





Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....