Posts

சத்தான டிபன் ஓட்ஸ் கிச்சடி.....

Image
 ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவும். ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். தேவையான பொருட்கள்  ஓட்ஸ் - 1/2 கப்  பாசி பருப்பு - 1/2 கப்  வெங்காயம் - 1  இஞ்சி - 1 பச்சை மிளகாய் - 2  கேரட் - 1  பீன்ஸ் - 10  பச்சை பட்டாணி - 1/4 கப்  பெருங்காய தூள் - சிறிதளவு  மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி  மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு, கொத்தமல்லி இலை - தேவையான அளவு  நெய் - 2 தேக்கரண்டி  பட்டை - 1துண்டு  சீரகம் - 1 தேக்கரண்டி  தண்ணீர் - 3 கப்   செய்முறை வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  பாசி பருப்பை அரை மணிநேரம் ஊறவைக்கவும் கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.  அடுத்து கேரட், பீன்ஸ், பட்டாணி, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.  காய்கறிகள் வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.  அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.  உப்பு சரிபார்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும்.  இறுதியாக கொத்தமல்லி

வாரம் ஒருமுறை ஆப்பிள் பேஸ் பேக் போடுங்க...அப்புறம் பாருங்க மாற்றத்தை....

Image
 ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. பிம்பிள் தழும்பு, கரும்புள்ளிகளை குறைக்கும். ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆப்பிள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புத்துயிர் அளிக்கவும் செய்யும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். * ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள். ஆப்பிள் - 1, தண்ணீர் - 1 கப் 

Whatsapp கொண்டுவந்த அதிரடி அப்டேட்! இனி நமக்கு நாமே மெசேஜ் அனுப்பலாம்......

Image
 whatsapp அதிரடியாக மெசேஜ் யுவர்செல்ப் ( Message Yourself) என அழைக்கப்படும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் பொருந்தும். இந்த அப்டேட்டை பயன்படுத்தி யூசர்கள் தங்களுக்கென சில குறிப்புகளை எடுத்துக் கொள்ள முடியும். இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக whatsapp இல் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சிலருக்கு உடனடியாகவும் சிலருக்கு சில வாரங்களிலும் வேலை செய்யும் எனவும் குறிப்பிடப்பிட்டுள்ளது. புதிய மெசேஜ் Message Yourself அம்சத்தை இயக்குவது எப்படி? whatsapp -ஐ திறக்கவும்  புதிய சாட்-ஐ உருவாக்க வேண்டும்  உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட் மொத்தமும் திரையில் தோன்றும் அந்த லிஸ்டில் உங்களுடைய மொபைல் நம்பரும் மெசேஜ் செய்வதற்கு உண்டான லிஸ்டில் தோன்றும்.  உங்களுடைய மொபைல் எண்ணை கிளிக்

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!

Image
 இன்றைய காலத்தில் பலரும் வயிற்று கொழுப்பு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக டயட்டுகள், கண்ட கண்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உண்மையில் வீட்டில் இருந்தப்படி கூட வயிற்று கொழுப்பை எளியமுறையில் கரைக்கலாம். அந்தவகையில் வயிற்றின் கொழுப்பை எளிய முறையில் கரைக்க கூடிய 5 உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.  பை சைக்கிளிங் சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் வரை எரிக்கலாம். ரிவர்ஸ் கிரஞ்ச் இந்த பயிற்சி வயிற்று பகுதியின் முதன்மை தசைகளை வலுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின் போதும், மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும்.  வெர்டிக்கல் லெக் கிரஞ்ச் உடலை கிடைமட்டமாக வைத்துக் கொண்டு, கால்களையும், தலைப்பகுதியையும் உயர்த்தி இறக்க வேண்டும். இதன்மூலம் அடி வயிற்று பகுதி கடினமடையும். உடற்பயிற்சி பால் கிரெஞ்ச் இந்த உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு நல்ல உடல் வலு தேவைப்படும். இதற்காக ஒரு உடற்பயிற்சி பந்து வாங்கி கொள்ள வேண்டும்.   ALSO READ :  உடல் எடை உடனடியா குறையணுமா?

இஞ்சி- பூண்டு விழுதில் இவ்வளவு அற்புத நன்மைகள் உள்ளதா? அவசியம் தெரிஞ்சிகோங்க....

Image
 பொதுவாக காலங்காலமாக அன்றாட சமையல் முதல் பிரியாணி வரை ஒவ்வொரு உணவிற்கும் அதிக சுவையை சேர்க்க பயன்படும் ஒரு அற்புத பொருள் தான் இஞ்சி-பூண்டு விழுது. பெரும்பாலான குடும்பங்கள் பல்வேறு உணவுகளில் இஞ்சி-பூண்டை சேர்த்து வருகிறார்கள். குறிப்பாக வீடுகளில் இயற்கையாக அரைக்கும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் பல உணவுகளின் சுவையை அதிகரிக்கிறது. இது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் அந்தவகையில் இரண்டையும் சேர்க்கும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   * வயிற்றுப்போக்கைக் குறைக்கவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், உடல் சரியாக செயல்படவும் உதவுகிறது. * கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டில் நச்சுகளை அகற்றcancecவும் உடலை நச்சுத்தன்மையாக்கவும் உதவும். * இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இது உங்கள் உடலை சூடாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். * தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் விநியோகத்தை அதிகரிப்பதற்கும

வியக்க வைக்கும் மனித உடல் அதிசயங்கள்...

Image
 மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும் தான். *மனித உடலின் மூலப்பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை.  *மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும் தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், அவனது காது, ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு இருக்கும்.  *ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் (முடி) எண்ணிக்கை, சுமார் 5 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள், உள்ளங்கையும், உள்ளங்காலும்தான்.  *பொதுவாக மனிதர்கள் இரவு வேளையில் தூங்கும்போது மட்டும்தான் கண்களை மூடியிருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் பகல் வேளையில் விழித்திருந்தாலும் கூட, ஆயிரக்கணக்கான முறை நம்முடைய கண்களை சிமிட்டுகிறோம். இதை ஆய்வு செய்து பார்த்தால், இரவைத் தவிர பகல் வேளையிலும் கூட பாதி நேரம் நாம் கண்களை மூடிக்கொண்டுதான்

ஆளை அசத்தும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி செய்யலாமா....

Image
  சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம். ஐய்யங்கார் வீட்டு சாம்பார் ஆளை அசத்தும் சுவையில் இருக்கும். தேவையான பொருள்கள் தனியா - கால் கிலோ குண்டு மிளகாய் - 125 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகு - 25 கிராம் வெந்தயம் - 10 கிராம் விரளி மஞ்சள் - 25 கிராம் செய்முறை மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். பின்னர் தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம். சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள். அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்கக்கூடாது. அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி. ALSO READ :  சத்தான அரைக்கீரை வடை! செய்வது ரொம்ப

முருங்கையின் மகத்துவம்! முருங்கையின் அனைத்து பாகங்களும் மாமருந்து!

Image
 பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளின் ஒன்றான முருங்கை, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. முருங்கையில் உள்ள பைட்டோ கெமிக்கல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை முருங்கை பூர்த்தி செய்கிறது. வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால், உடலில் ஆற்றல் நிலை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது, இறைச்சி மற்றும் மீன் உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு, முருங்கை ஒரு வரப்பிரசாதம். இதில் புரதச் சத்து அதிகம் உள்ளது. முருகைக்காயின் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். முருங்கைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் 1. முருங்கையில் உள்ள பைட்டோ கெமிக்கல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதனுடன், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் ப

உடல் எடை உடனடியா குறையணுமா? இரவில் இந்த மேஜிக் பானங்களை குடிங்க!!

Image
 Weight Loss Tips: கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலும், ஜிம்மிற்கு செல்லாமலும் கூட உடல் எடையை குறைக்க முடியும்.  எடை இழப்புக்கு வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரவில் வெந்தய நீர் அருந்துவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய நீர் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்கும் பானங்கள் :  இன்றைய காலத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பருமனான உடல் வாகை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில், உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. எனினும், உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சியை தவறாமல் செய்வது ஆகியவற்றை அனைவராலும் செய்ய முடிவதில்லை.  அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலும், ஜிம்மிற்கு செல்லாமலும் கூட உடல் எடையை குறைக்க முடியும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் இரவில் சில ஆரோக்கியமான பானங்களை குடிக்கத் தொடங்குங்கள்.

சத்தான அரைக்கீரை வடை! செய்வது ரொம்ப எளிது...

Image
 மாலை நேரம் வந்துவிட்டாலோ எதையாவது எடுத்து கொரிக்கவே தோன்றும், அந்நேரம் துரித உணவுகளின் பக்கம் செல்லாமல் மிக எளிதாக அதுவும் வீட்டிலேயே செய்யக்கூடிய கீரை வடை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை ஆரோக்கியமான வாழ்வுக்கு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள். ஏனெனில் கீரையில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. அரைக்கீரையானது ஆரம்ப கட்ட மனநோயை சரிசெய்யும் சக்தி கொண்டது, இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் அரைக்கீரை நரம்புகளை பலப்படுத்தும், சித்த வைத்தியத்தில் முக்கிய கீரையாக பார்க்கப்படும் அரைக்கீரையை கொண்டு வடை செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் அரைக்கீரை- ஒரு கப் (பொடியாக நறுக்கியது) வெங்காயம்- ஒரு கப் (பொடியாக நறுக்கியது) உளுத்தம்பருப்பு- அரை கப் கடலைப்பருப்பு- அரை கப் இஞ்சி- ஒரு துண்டு காய்ந்த மிளகாய்- 5 (காரத்திற்கு ஏற்ப) சோம்பு- ஒரு டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு செய்முறை உளுத்தம் பருப்பு, கடல

WhatsApp-ல் ப்ளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி? 2 எளிதான ட்ரிக்ஸ்........

Image
 வாட்ஸ் அப்பில் நம்மை ப்ளாக் செய்தவர்களும் நம்மால் மெசேஜ் அனுப்ப முடியும். இதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது. புதிய குரூப் மூலம் இதை மேற்கொள்ள நமக்கு தெரிந்தவர் உதவி தேவைப்படும். அவர்களிடம் ஒரு குரூப் தொடங்க சொல்லி அதில் உங்களையும், உங்களை பிளாக் செய்தவரையும் இணைக்க வேண்டும். இப்போது, அந்த குரூப்பில் நீங்கள் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும், உங்களை பிளாக் செய்தவருக்கும் விசிபிள் ஆகும். இதை வைத்து, அவர்களிடம் கோரிக்கை வைத்து அல்லது மன்னிப்பு கேட்டு, அன்பிளாக் செய்யுமாறு நீங்கள் கேட்கலாம். சரி, மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம் என நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்ஸில் ‘டெலீட் அக்கவுண்ட்’ என கொடுத்து, அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யவும். ஃபோனில் மீண்டும் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து, மீண்டும் அக்கவுண்ட் தொடங்கவும். ஆப் ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால், உங்களை பிளாக் செய்த நபருக்கும் நீங்கள் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால், வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலீட் செய்யும்போது, அனைத்து குரூப்புகளில் இருந்தும் நீங்கள் வெளியேறி விடுவீர்கள் என்பதை மறவாதீர்கள்.  ALSO READ :  வாட்ஸ்அப்பில் இருக்கும்

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....

Image
 பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி வாய்ப்புண் வருவதுண்டு. இது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. இதற்கு சில எளிய வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.  * தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும். *  ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமையும். * 2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்கவும். *  1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் போதும்! நோய் நொடி இல்லாத வாழ்க்கை.....

Image
 கீரைகளில் பலவகைகள் உள்ளன, எல்லா வகையான கீரைகளிலும் ஏதேனும் சத்துக்கள் நிச்சயம் நிறைந்திருக்கும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள் தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்திருக்கும் மூக்கிரட்டை கீரை குறித்து உங்களுக்கு தெரியுமா?  மூக்கிரட்டை கீரை யாரும் விதை போட்டு வளர்வதில்லை. தானாக வேலிகளில் சாதாரணமாக தரைகளில் வேர் விட்டு வளர்ந்து கிடக்கும். இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். மூக்கிரட்டை கீரை இதற்கு அதிமருந்தாகும். சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். மூக்கிரட்டை கீரை இதற்கு

நீங்கள் நீண்ட காலம் இளமையாக தெரியணுமா? இந்தவொரு பருப்பை இப்படி பயன்படுத்தி பாருங்க!! விரைவில் பலன் தரும்....

Image
 இன்றைய காலத்தில் பலரும் முகத்தை அழகாக வைத்த கொள்ள வேண்டும் என்று நினைத்து பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி முகத்தை மேலும் பாழாக்குகின்றனர். அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிய முறையில் முகத்தை இளமையுடன் வைத்து கொள்ள முடியும். அதற்கு மைசூர் பருப்பு உதவுகின்றது. இது சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி, சரும நிறத்தை மேம்படுத்த உதவுவதோடு, சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ளும். அந்தவகையில் மைசூர் பருப்பை எதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.     * ஒரு டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகப்பரு பிரச்சனையைத் தடுக்கலாம். * ஒரு பௌலில் மைசூர் பருப்பு பொடி மற்றும் கடலை மாவை சமஅளவில் எடுத்து, காய்ச்சாத பாலை ஊற்றி பேஸ்ட் செய்ய வேண்டு

உடல் எடையை சட்டென குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி! தினமும் 5 நிமிடங்கள் இதை செய்தாலே போதுமாம்....

Image
 இன்றைய காலத்தில் பலருக்கு பெரும் தலையிடியாக உள்ள பிரச்சினை தான் உடல் எடை. அதிலும் பலர் வயிற்று பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க போராடி வருகின்றனர். வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க ஏராளமான பயிற்சிகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஜப்பானிய 'டவல் உடற்பயிற்சி. இது ஜப்பானின் புகழ்பெற்ற மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி புகுட்சுட்ஸியால் இந்தப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இது உடல் எடையைக் குறைப்பதுடன் பல ஆரோக்கிய பலன்களையும் அள்ளித்தருகின்றது. தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.   செய்முறை *  கை, கால்களை நன்றாக நீட்டி தளர்த்திய நிலையில், தரையில் விரிக்கப்பட்ட பாயின் மேல், மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக்கொள்ளுங்கள். * தொப்புளுக்கு நேர் கீழே, முதுகுக்கு அடியில், ஒரு டவலை நன்றாக சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள். * கால்கள் இரண்டையும் 10 செ.மீ. இடைவெளியில் நகர்த்தி, தோள்பட்டை தரையில் படுமாறு வைத்திருங்கள். * கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையைப் பார்த்தவாறு இருப்பதுபோல் செய்யுங்கள். * இந்த நிலையில் கு