இன்று பிரெட் ஊத்தாப்பம் செய்யலாம் வாங்க......

 ஊத்தாப்பம் அனைவருக்கும் பிடிக்கும். இன்று பிரெட் வைத்து ஊத்தாப்பம் செய்முறையை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 

கடலை மாவு - 1 கப் 
அரிசி மாவு - 1 கப், 
தயிர் - அரை கப், 
பிரெட் - 5, 
வெங்காயம் - 2, 
பச்சைமிளகாய் - 5, 
கொத்தமல்லி - சிறிது,
 எண்ணெய், உப்பு, சீரகம் - தேவையான அளவு.

செய்முறை

 வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து போடவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

 தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார்.

 சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுகொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....