அரிசியில் மட்டுமல்ல சேமியாவிலும் புலாவ் செய்யலாம்...

 குழந்தைகளுக்கு இந்த புலாவ் மிகவும் பிடிக்கும். இந்த ரெசிபி செய்ய 20 நிமிடங்களே போதுமானது.


தேவையான பொருட்கள் : 

சேமியா - 1 கப் 

வெங்காயம் - 2

 பச்சைமிளகாய் - 5 

தக்காளி - 2 

பீன்ஸ் - 50 கிராம்

 கேரட் - 50 கிராம்

 பச்சை பட்டாணி - 1/2 கப் 

கொத்தமல்லி - சிறிதளவு, 

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

 மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

 தனியா தூள் - 1 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


தாளிக்க :

 பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு

 நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

வெறும் வாணலியில் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். 

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.

 கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். அடுத்து துருவிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

 காய்கறிகள் முக்கால் பாகம் வதங்கியவுடன் தேவையான அளவு உப்புடன், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து மசாலா பச்சை வாசனை போனடவுன் 4 கப் தண்ணீர் விடவும். 

தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும். 

சேமியா வெந்தது பொல பொல வென்று வந்ததும் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். 

சூப்பரான சேமியா வெஜிடபிள் புலாவ் ரெடி.







Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....