வீட்டிலேயே பாதங்களை பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்.....

 பொதுவாக நம்மில் பலருக்கு கால்கள் வறண்டு போய் காணப்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வெயில் கால்களில் படுவதனால் கால்கள் வறண்டு விடுகின்றது.

மேலும் கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு கால்களும் மென்மையை இழந்து விடும்.

அதுமட்டுமின்றி சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வதில்லை. இதனால் கூட பாதங்கள் பொலிவிழந்து காணப்படும்.

பொலிவிழந்த பாதங்களை பளபளப்பாக மாற்ற சூப்பரான வழிமுறை ஒன்றை பார்ப்போம். 


தேவையான பொருட்கள்:


 பால் 4 கப்

பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை


முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும்.

அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும்.

பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.  



ALSO READ : கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்....

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....